பக்கம் எண் :

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் சூ.42301

தானே யிருக்கதன் மனையே யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்பு நடு பாத்தியன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.”
  

(குறுந் -262)
 

இது போக்கு நேர்ந்தமை தோழி கூறியது பிறவுமன்ன                                        (39)
 

பாரதியார்
  

42. தலைவரு...................மேன
  

கருத்து:- இச்சூத்திரம் தோழிக்குக் கூற்று நிகழுமிடம் உணர்த்துகின்றது.
  

பொருள்:-  தலைவரும் விழும நிலையெடுத்துரைப்பினும் தலைவனுக்கும்  தலைவிக்கும் பிரிவால்  வரும்
ஏதப்பாடுகளை    எடுத்துக்     கூறுதற்கண்ணும்;     போக்கற்கண்ணும்   தலைமகனுடன்     தலைவியை
அனுப்புமிடத்தும்;  விடுதற்கண்ணும்  -   உடன்கொண்டு  செல்லாமல்,   தலைவன்    தலைவியை விட்டுப்
பிரியுமிடத்தும்;   நீக்கலின்  வந்த  தம்முறு  விழுமமும்  -  தலைவி   தன்னையும்    தமரையும்   நீத்துச்
செல்லுதலால்   தனக்கும்   தாயர்   முதலிய   தமருக்கு  முற்ற துன்பத்தையும்; வாய்மையும்  பொய்மையும்
கண்டோர்ச்  சுட்டித்தாய்  நிலை  நோக்கித்   தலைபெயர்ந்துக்  கொளினும் - மெய்யையும்   பொய்யையும்
புனைந்து  கூறியும்  கண்டோரைக்  காட்டியும்   நற்றாயின்   பருவரலைக்  கருதி  மறுத்தரத்  தலைவியை
வரவேற்றுக்   கொள்ளுதலினும்;  நோய்   மிகப்   பெருகித்தன்   நெஞ்சு  கலுழ்ந்தோளை  -  தலைவன்
விடுத்தகல  ஆற்றாமையால்  மிக   நொந்து  மனங்   கலங்கும்  தலைவியை   அழிந்தது  களையென  -
வருந்துதலை  ஒழியென;  மொழிந்தது;  கூறி-தலைவன்  கூறியதை   எடுத்துக்கூறி;   வன்புறை   நெருங்கி
வந்ததன்     திறத்தொடு    -    வற்புறுத்தி    ஆற்றுவிக்கும்    கூற்றுகள்    நிகழ்த்தும்   திறத்தொடு;
என்றிவையெல்லாம்-இவை  போல்வன பிற  பொருந்துவனவெல்லாம்;  இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும்
தோழிமேன-அகத்துறை இலக்கணத்தை ஆராயின் தோழிக்குரியனவாய்ப் பொருந்தித் தோன்றும்.