“பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி பொய்ப்பின் தூம்புடைத் திரள்வீ ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் சுரம்பல கடந்தோர்க் கிரங்குப வென்னார் கௌவை மேவல ராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரையா அல்லஎன் மகட்கெனப் பரைஇ நம்முணர்ந் தாறிய கொள்கை யன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.” |
(அகம்-95) |
இது போக்குடன்பட்ட தலைவி தோழிக் குரைத்தது அகம். |
“அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புண னெரிதர வீந்துக் காங்குத் தாங்கு மளவை தாங்கிக் காம நெரிதரக் கைநில் லாதே.” |
(குறுந்-149) |
இக் குறுந்தொகை நாண் நீங்கினமை கூறியது. |
“சிலரும் பலருங் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச் சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப வலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.” |
(நற்றிணை-149) |
இந் நற்றிணை அலர் அச்சம் நீங்கினமை கூறியது. |
“சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர் |