பக்கம் எண் :

370தொல்காப்பியம் - உரைவளம்

நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த்
தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின்பெற
வாரிடை யிறந்தன ளென்மி
னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.”
  

(ஐங்குறு-384)
 

இவ் வைங்குறுநூறு ‘யான் போகின்றமை ஆயத்திற்கு உரைமின்’ என்றது.
   

“கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க
ணற்றோ ணயந்துபா ராட்டி
யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.”
  

(ஐங்குறு-385)
 

இவ் வைங்குறுநூறு இன்றுயான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது.
   

“கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ்
சுரநனி வாரா நின்றன ளென்பது
முன்னுற விரைந்தனி ருரைமி
னின்னகை முறுவலென் னாயத் தோர்க்கே.”
  

(ஐங்குறு-397)
 

இவ்வைங்குறுநூறு மீள்கின்றாளென்று என் வரவு ஆயத்தார்க்குக் கூறுமின் என்றது.
   

“வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற
வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியி
னெல்லையி லிடும்பை தரூஉ
நல்வரை நாடனொடு வந்த வாறே.”

(ஐங்குறு-392)
 

இவ் வைங்குறுநூறு மீண்டு வந்த தலைவி வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது.