“அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினு மினிய வவர் நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே.” |
(ஐங்குறு-203) |
இஃது உடன் போய் மீண்ட தலைவி ‘நீ’ சென்ற நாட்டு நீர் இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தாயென்ற தோழிக்குக் கூறியது. |
“அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வரு மென்னையை மறைத்த குன்றே.” |
(ஐங்குறு-312) |
இவ் வைங்குறு நூறு ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்றது தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. |
இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு: |
“மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே.” |
இனி அயலோர் கூற்று நிகழுமாறு: |
“துரந்ததற் கொண்டு துயரடச் சாஅ யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி யெவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மடமகள் வெஞ்சின வெள்வேல் விடலைமுந் துறவே.” |
(ஐங்குறு-393) |
செய்யுளியலுட் ‘பார்ப்பான் பாங்கன்’ |
(தொ பொ-செய்-190) ‘பாணன் கூத்தன்’ |
(தொ-பொ-செய்.191) என்னுஞ் சூத்திரங்களாற் பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க. |