பக்கம் எண் :

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே சூ.45373

“மன்ற மராத்த பேஎமுதிர் கடவுள் 
கொடியோர்த் தெறூஉ மென்ப; யாவதும்
கொடியோ ரல்லரெங் குன்றுகெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று நுதலே,

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.”
4 

(குறுந்-87)
 

இனி, செவிலி கூற்றுக்குச் செய்யுள் :
   

“முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇ
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”
5  

(குறுந்-167)
 

“கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூரோளே மடந்தை; வேறூர்
வேந்துவிடும் தொழிலொடு செலினும்
சேந்துவர லறியாது செம்ம றேரே.”
6  

(குறுந்-242)
 

பாங்கன் கூற்றிற்குச் செய்யுள்:
 

“காமம் காம மென்ப, காமம்
அணங்கும் பிணியு மன்றே;
முதைச் சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம்; பெருந்தோ ளோயே”.  

 (குறுந்-204)
 

4  பிரியேள்  எனச்  சூளுற்ற  தலைவன்  பிரிதலின்  தெய்வம்  ஒறுக்கும்  என  நினைந்து  தலைவி
தோழியிடம் கூறியது.
 

5 தலைவியின் மனையற மாண்புகண்டுவந்த செவிலி நற்றாய்க்குக் கூறியது.
 

6 -