பக்கம் எண் :

374தொல்காப்பியம் - உரைவளம்

இது தலை மகற்குப் பாங்கன் உரைத்தது7
  

“இடக்குங் கேளிர் நுங்குறை யாக
நிறுக்கலாற் றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையி லூமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.”
 

(குறுந்-58)
 

இக் குறுந்தொகை (58 ஆம்) பாட்டு, கழறிக் கூறிய பாங்கற்குத் தலைவன் மாறிக் கூறுதலாம்.
  

ஆயத்தார் கூற்றுக்குச் செய்யுள்:
 

“தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்தும் கையா றோம்பென
ஓரை ஆயங் கூறக் கேட்டும்.”
 

எனக் குறுந்தொகைச் (48) செய்யுளில் ஆயத்தின் கூற்று நிகழ்ந்தமை காண்க.
 

பரத்தையர் கூற்றிற்குச் செய்யுள்:
 

“கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
யாமஃ தயர்கஞ் சேறும், தானஃ
தஞ்சுவ துடையளாயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.”

(குறுந்-80)
 

“கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மாமழை
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வ மணங்குக, தோழி!
 


7 பாங்கன் கழறியது.