“நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து யாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லியது உரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே.” |
(ஐங்குறு-478) |
இது தூது கண்டு கூறியது. |
“பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள் கையறு நெஞ்சிற் குசாஅத் துணையாகச் சிறுவரைத் தங்குவை யாயின் காண்குவை மன்னாற் பாணவெந் தேரே.” |
இது தூது விடும் தலைமகன் கூறியது. |
“நெடுங்கழை முளிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய ஆயின முன்னே இனியே ஒண்ணுதல் அரிவையை உள்ளுதொறும் தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே.” |
(ஐங்குறு-322) |
(48) |
இஃது இடைச்சுரத்துக் கூறியது. |
நச்சினார்க்கினியர் |
48. மரபுநிலை... ... ... ... என்ப |
இது மரபியலுட் கூறப்படும் மரபன்றி அகத்திணைக்கு உரிய மரபுகள் கூறுகின்றது. |
(இ-ள்) மரபுநிலை திரியா மாட்சிய ஆகி-புலனெறி வழக்கஞ் செய்து வருகின்ற வரலாற்று முறைமை. திரியாத மாட்சியவாய்,1 விரவும் பொருளும் விரவும் என்ப-பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந்திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் ஏனைத்திணைக்கு உரியவாய் விரவும் பொருளும் விரவி வருமென்று கூறுவார் புலவர் எ-று. |
1 மரபு நிலை என்பதற்கு இவ்வுரையே சிறக்கும். |