1 பொருள்: பக்கம் 94ல் காண்க. 2 பொருள்: தலைவனைப் பணிந்த மொழியால் வழி படுதல் உரிமை எக்காலத்தும் தலைவிக்கு இயல்பு ஆகலான் காமம் கையிகந்த காலத்துட் பணிந்தமொழியாற் கூறுதல் ஆராயும் காலத்துத் தலைமகனுக்கேயுரியதாகும். பணிந்தமொழி-தன்னைத் தாழ்த்திக் கொண்டு கூறும் சொல். 3 பொருள்: பிரிய வல்ல பெரியோர்க்குப் பிரிவாற்றாதவர் அடியரோ? அன்றே என்றாள் தலைவி. அதற்குத் தலைவன் கடியவர் தமக்குப் பதில் சொல்லத் தக்கவர் யாரிருப்பர் என்றான். |