232தொல்காப்பியம் - உரைவளம்
 

வகைக்  கைகோளினும்    பிறந்த  அலரால்   தலைவற்குந்   தலைவிக்குங் காமத்திடத்து மிகுதி தோன்றும்
என்றவாறு.
 

என்றது,  களவு   அலராகிய  வழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங் காமஞ் சிறத்தலுங்
கற்பினுட்  பரத்தைமையான்  அலர்   தோன்றிய   வழிக்   காமஞ்   சிறத்தலும்   அவள்  வருந்துமென்று
தலைவற்குக் காமஞ் சிறத்தலுந் தலைவன் பிரிவின்கட் டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம்.
 

உதாரணம்
 

“ஊரவர் கௌவையெருவாக வன்னைசொன்
னீராக நீளுமிந்நோய்”
1

(குறள் - 1147)
 

“நெய்யாலெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காம நுதப்பேமெனல்”
2

(குறள் - 1148)
 

என்றாற்போல்வன கொள்க.
 

162.

கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே. 
 
(23)

இளம்
 

இதுவும் அது.
 

(இ-ள்) கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு.
 

ஆங்கு - அசை
 

“அகலநீ துறத்தலின் அழுதோவா உண்கணெம்
புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்
நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடுந் துணங்கையுள் அரவம்வந் தெடுப்புமே”
3

(கலித் - 70)
 

எனவரும்.


1 பொருள்: பக்கம் 231ல் காண்க.

2 பொருள் :   அலரால்   காமத்தை   அவிப்பேம்   என்பது   நெய்யால்   நெருப்பை   அவிப்பேம்
என்பதுபோலும்.

3 பொருள் : தலைவ!  நீ   எம்மைப்பிரிய அதனால் உறக்கத்தை மறந்த எம் கண்கள், எம் மெய்யானது
புதல்வனைத்  தீண்டலால் மூடுதலும் (உறங்குதலும்) கூடும்; ஆனால் அதனை, நீ பரத்தையர்க்கு என்று
அமைந்த