234தொல்காப்பியம் - உரைவளம்
 

சிறந்து  புலந்தவாறு  காண்க.  ஆண்டுப்  பணிந்து    கூறுங்காலும்  விளையாடுங்காலுந் தலைவன்   காமச்
சிறப்புக் காண்க.
 

வாயில்கட்கில்லாதது
 

163.

மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமையைத்
தம்முள வாதல் வாயில்கட் கில்லை.
 

(24)

இளம்
 

என் - எனின் வாயில்கட் குரியதோர் மரபுணர்த்திற்று.
 

(இ-ள்)  மனைவி மாட்டுக்  கிழவோன் கொடு மையைத் தாங்கார் கூறல் வாயில்கட்கில்லை யென்றவாறு.
   

நச்
 

இது வாயில்கட்கு உரிய இலக்கணங் கூறுகின்றது.
 

இதன்பொருள்  : -  மனைவி தாட்டலை - தலைவி எத்திறத் தானும் புலந்துழி அவளிடத்து கிழவோன்
கொடுமை  -  தலைவன்    கொடுந்தொழில்களை,   தம்  உள  ஆதல்  -  தம்  உரைக்கண் உள வாக்கி
உரைத்தல். வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில்களுக்கில்லை என்றவாறு.
 

தாட்டலையென  மாறுக,  அது  பாதத்திடத் தென்னுந் தகுதிச் சொல், அது வாயில்கள் கூற்றாய் வந்தது.
உதாரணம் வந்துழிக் காண்க.
 

வாயில்கட்குள்ள தொன்று
 

164.

மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே.
 

(25)

இளம்
 

என்-எனின், இதுவுமது.
 

(இ-ள்)  மனைவி  முன்னர்ச் செயலற்றுக் கூறுஞ் சொல் மனைவிக்கு உறுதியுள்வழி வாயில்கட்கு உண்டு
என்றவாறு.