கொள்க. இந்நூல் வழக்குஞ் செய்யுளும் பற்றி நிகழ்தலின், இப்பொருண் மேல்வரும் வழக்குரை1 உதாரணமாம். |
நச் |
இது கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது. |
இதன் பொருள்: தொல்லவை உரைத்தலும் - முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும் நுகர்ச்சி ஏற்றலும் - நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும் பல் ஆற்றானும் ஊடலில் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென்றாயினும் இஃது அன்பின்மையாமென்றாயினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும் உறுதி காட்டலும் - இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பநுகர்தலே நினைக்கும் பொருளென்றலும். |
இனிக் கூறுவன தலைவற்குரிய; அறிவு மெய் நிறுத்தலும் புறத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின்கண்ணே நிறுத்தலும், ஏதுவின் உணர்த்தலும் - இக் கழி காமத்தான் இழிவு தலைவருமென்றதற்குக் காரணங் கூறலும், துணிவு காட்டலும் - அதற்கேற்பக் கழி காமத்தாற் கெட்டாரை எடுத்துக்காட்டலும் அணி நிலை உரைத்தலும் - முலையினுந் தோளினும் முகத்தினும் எழுதுங்காற் புணர்ச்சி தோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறலும், கூத்தர்மேன இவ்வெட்டுங் கூத்தரிடத்தன என்றவாறு. |
கூத்தர் - நாடக சாலையர். தொன்றுபட்ட நன்றுந்தீதுங் கற்றறிந்தவற்றை அவைக்கெல்லாம் அறியக் காட்டுதற்கு உரியராகலிற் கூத்தர் இவையுங் கூறுபவென்றார். இலக்கியம் இக்காலத் திறந்தன. |
“பொருட்பொருளார் புன்னலந் தோயா ருட்பொரு ளாயு மறிவினவர் |
(குறள் - 914) |
இஃது, அறிவு மெய்ந்நிறுத்தது. |
1 வழக்குரையும் என உம்மை கொடுத்துக் கூறுக என்பர் வெள்ளைவாரணனார். உம்மை செய்யுளேயன்றி என்பதைக் குறிக்கும். |