256தொல்காப்பியம் - உரைவளம்
 

தலைவன் பாசறைப் பிரிவு
  

173.

எண்ணரும் பாசறைப் பெண்ணொடும்* புணரார்.(34)
 

பி.இ.நூ.
  

ந.அக 86, இல.வி.453.
  

வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குலமுடை மாதரொடு கலமிசைச் சேறலும்
பாசறைச் சேறலும் பழுதென மொழிப.
   

இளம்
  

இது, தலைமகட்குரியதோர் மரபு உணர்த்திற்று.
  

(இ-ள்) நினைத்தற்கரிய1 பாசறைக்கண் தலைமகளிரோடும் புணரார் தலைமக்கள் என்றவாறு.
  

நினைத்தற்     கருமை-மாற்றாரை     வெல்லுங்     கருத்து     மேற்கோடலிற்      றலைமகளிரை
நினைக்கலாகாதாயிற்று. ‘பாசறை’ என விசேடித்தவதனால்2 ஏனைப் பிரிவுக்குமாமென்று கொள்க.
  

நச்
  

இஃது  எய்தியது  விலக்கிற்று.  ‘முந்நீர்  வழக்கம்’  (34) என்பதனாற் பகைதணி வினைக்குங் காவற்குங்
கடும்பொடு3 சேறலாமென்று எய்தியதனை விலக்கலின்.
  

இதன்  பொருள்:- எண் அரும்பாசறை-போர் செய்து வெல்லுமாற்றை  என்னும் அரிய பாசறையிடத்து,
பெண்ணொடு புணரார்-தலைவியரொடு தலைவனைக் கூட்டிப் புலனெறி வழக்கஞ் செய்யார் என்றவாறு
  

இரவும் பகலும் போர்த்தொழின் மாறாமை தோன்ற ‘அரும் பாசறை’ என்றார்.  


* பெண்ணொடு என்பதும் பாடம்.
  

1 நினைத்தற்கரிய-மனைவியரை நினைத்தற்கியலாத
  

2 எண்ணரும் பாசறை எனப் பாசறையை விசேடித்தவதனால்
  

3 கடும்பு-சுற்றம்.