அணுக இராது தொலைவில் பிரிந்தோ உறைதல் இல்லை. இவ்வரையறை எப்போது எனின் பரத்தையிற் பிரிந்த காலத்து என்க. |
எனவே அணிமையிலோ தொலைவிலோ பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைவியின் பூப்பு உணர்த்தப்படின் பரத்தையின் நீங்கித் தலைவியிடம் உடன் உறைதல் வேண்டும் என்பது கூறியவாறு. |
நச்சினார்க்கினியர், பூப்பின் நீத்துப் புறப்பாடு ஈராறு நாளும் அகன்று உறையார் எனக் கூட்டியது தேவையற்றது. |
ஓதற் பிரிவுக்காலம் |
186. | வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது. | (47) |
|
பி.இ.நூ. |
நம்பியகம் 89. |
ஓதற் பிரிவுடைத் தொருமூன் றியாண்டே |
இல.வி. 457. |
நம்பியகச் சூத்திரமே. |
இளம். |
இதுவும்மது. |
இ-ள்: விரும்பப்பட்ட கல்விக்கட் பிரியும் காலம் மூன்றியாண்டின் மிகாது என்றவாறு. எனவே ஓரியாண்டாயினும் ஈரியாண்டாயினும் ஆம் என்பது கொள்ளப்படும். |
நச். |
இஃது ‘ஓதலுந்தூதும்’ (26) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ஓதற் பிரிவிற்குக் காலவரையறையின்றென்பதூஉம் அவ்வோத்து இதுவென்பதூஉம் உணர்த்துகின்றது. |
*இதன் பொருள்: கல்வி வேண்டியாண்டு இறவாது-துறவறத்தினைக் கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டியயாண்டைக் கடவாது, மூன்று இறவாது-அக்கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது என்றவாறு. |
* நச்சினார்க்கினியரின் இவ்வுரை வலிந்த உரையாகும் கற்பியலில் இல்லறவொழுக்கம் பற்றியன கூறல்வேண்டு |