கற்பியல் சூ.49289
 

“துயிலின்றி யாநீந்தத் தொழுவையம் புனலாடி
மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னே;’
  

(கலித்-30)
 

என்று தலைவன் பதியிகந்து நுகர்ந்தமை தலைவி கூறியவாறு காண்க.
  

நச்.
  

இது, தலைவற்குங், காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரியதோர் மரபு கூறுகின்றது.
  

(இ-ள்) : யாறும் குளனும் காவும் ஆடி-காவிரியுந் தண்பொருனையும்  ஆன்பொருனையும்   வையையும்
பேலும்  யாற்றிலும் இரு காமத்திணையேரி போலும் (பட்டினப்-39)  குளங்களிலும்,  திருமருதந் துறைக்காவே
போலுங்   (கலி-25)   காக்களினும்  விளையாடி, பதி   இகந்து   நுகர்தலும்  உரிய  என்ப-உறை பதியைக்
கடந்துபோய்   நுகர்ச்சி    யெய்துதலுந்   தலைவற்குங்  காமக்கிழத்தியர்க்குந்    தலைவியர்க்கும்   உரிய
என்றவாறு.
  

ஏற்புழிக் கோடலால் தலைவியர்க்குச் சிறுபான்மையென்றுணர்க.
  

“கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையிற் கதழ்வு நெரிதந்த
சிறையழி புதுப்புனலாடுக
மெம்மொடுங் கொண்மோ வெந்தோள் புரை புணையே”
1  

(ஐங்குறு-78)
 

இது,    காமக்   கிழத்தி   நின்மனைவியோடன்றி   எம்மொடு   புணைகொள்ளின்   யாமாடுதுமென்று
புனலாட்டிற்கு இயைந்தான் போல மறுத்தது.
  

“வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத்
திதலை யல்குற்றுயல்வருங் கூந்தற்
  


1 பொருள் : தலைவ!  நின்மனைவியொடு  ஆடுவதை  விட்டு  எம்மொடு  எம்தோளையே புணையாகக்
கொண்டு  ஆடவருவாயாயின்,  ஒளியுடைய இலைபோலும் வேலுடைய கடிய குதிரையுடைய கிள்ளியின்
பகைவர்  மதிலையழிக்கச்  செல்லும் யானையைப்போல விரைந்து வன்மையுடன் கரையை யழிக்கும்படி
வரும் புதுப்புனலில் யாம் நீராடுவோம்.