பாதுகாத்து, அவர்க்கு வேண்டுவன கொடுக்கும் மகளிர்-நாஞ் செல்கின்ற வானப் பிரத்த காருகத்திற்குத் துணையாவரெனத் தலைவன் கூறவே தலைவியும் பொருள்களிற் பற்றற்றாளாய் யாமுந் துறவறத்தின் மேற்செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க.1 |
வாயில்கள் |
191. | தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாட்டி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. | (52) |
|
பி.இ.நூ. |
நம்பியகம் 68. |
கொளைவல் பாணன் பாடினி கூத்தர் இளையோர் கண்டோர் இருவகைப் பாங்கர் பாகன் பாங்கி செவிலி அறிவர் காமக் கிழத்தியர் காதற் புதல்வன் விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல் மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் தாமே. |
இல.வி.436. |
நம்பியகச் சூத்திரமே. |
இளம் |
இது கற்பின்கண் வாயில்களாவாரை யுணர்த்திற்று. |
இ-ள்: பாட்டி என்பது பாடினி என்றவாறு. தோழி முதலாகச் சொல்லப்பட்ட பன்னிருவரும் வாயில்கள் ஆவார் என்றவாறு. |
நச் |
இது, வாயில்களைத் தொகுத்து அவருந் துறவிற்கு உரியவராவர் என்கின்றது. |
1 மேற்பாடலைத் தலைவன் தலைவியிடம் கூறியதாகக் கொண்டு இவ்வாறு எழுதினார். |