10

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   

5

உடையோ ரிலரா சிரியரா குதலே.

(31)

2பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே.

(32)

தானே தரக்கொளி னன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை.

(33)

அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்
கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை.

(34)

பல்வகை யுதவி வழிபடு 3பண்பின்
நல்லோரொழித்,
தல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே.

     (இ - ள்.) இப்பெற்றிக் குற்றங்களையுடையோர் கற்கப்படாதோர் எ - று.
     (பி - ம்.) 1கொப்பன 2பெய்தல் 3பண்பினல்லோர்க்கு

(30-34)

3. பாடஞ்சொல்வதன் இலக்கணம்
 

 

(35)

ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி
உரைக்கப் 1படுபொருள் ளுள்ளத் தமைத்து

5

விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப.

     (இ - ள்.) இவ்வாறளித்தல் 2ஈதலியல்பு எ - று.
     (பி - ம்.) 1படும்பொருள் 2இயல்பு

(35)

4. மாணாக்கர்
 

 

(36)

தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே.
      (இ - ள்.) கற்பிக்கப்படுமாணாக்கராவாரிவர் எ - று.

(36)

மாணாக்கர்வகை

 

(37)

அன்னமாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.