4. - மெய்யீற்றுப்புணரியல்

101

   
     மண்டீமை, மண்ணன்மை; முட்டீமை, முண்ணன்மை எ - ம் வேற்றுமைக்கண்
வந்தன.

     1 ‘ஆயுங்கால்’ என்றதனான், நிரனிறைகொள்ளாது நிலைமொழி ஒன்றுடனே
வருமொழியிரண்டும் வருமெனக்கொள்க.

     (பி - ம்.) 1ஆயுங்காலை

(34)

 

(237)

உருபின் 1 முடிப்பவை யொக்கு2மப் பொருளினும்.

     எ - ன், பதப்புணர்ச்சிக்கு ஒரு 3கருவியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) மேல் உருபுபுணர்ச்சிக்கட் சொல்லுமவை, 4அவ்வுருபின் பொருளான
ஈண்டைவேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் எ - று.

     வ - று. மேல் உருபுபுணர்ச்சிக்கண் எல்லாமென்பது அஃறிணையான காலை
அற்றுச்சாரியையும் உருபின்மேல் உம்மும், உயர்திணையானகாலை நம்மும்
உருபின்மேல் 5உம்முமாமென்பார்; ஈண்டும் அவ்வாறே வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கும், எல்லாவற்றுக்கோடும், எல்லாநங்கையும் எனவும்,
தான், தாம், நாம் என்பன குறுகுமெனவும், யான், யாம் என்பன என், எம் எனவும்,
நீயென்பது நின் எனவும் நீரென்பது நும்மெனவும் ஆமென்பார்; ஈண்டும் அவ்வாறே
தன்கை, தங்கை, நங்கை எனவும், என்கை, எங்கை எனவும், நின்கை எனவும், நுங்கை
எனவும், ஆ மா கோ என்பன னகாரம் பெறுமென்பார்; ஈண்டும் அவ்வாறே
ஆன்கோடு, மான்கோடு கோன்குணம் எனவும், சுட்டுமுதல் வகரம் அற்றுச்சாரியை பெறுமென்பார்; ஈண்டும் அவ்வாறே அற்றுப்பெற்று அவற்றுக்கோடெனவும்
வருமென்றாரெனவுணர்க.
     பிறவும் இவ்வாறே வருவனவெல்லாம் அறிந்து கொணர்ந்து முடிக்க.

     (பி - ம்.) 1முடிபவை 2மிப்பொருளினும் 3விதி 4அவ்வுருபுப் பொருளான
ஈண்டை 5உம்முமென்றார்

(35)

 

(238)

இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
போலியு1 மருவும் பொருந்திய வாற்றிற்
கியையைப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே.

     எ - ன், 2இவ் வைவகை மொழிகட்கும் ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இடைச்சொல்லினும் உரிச்சொல்லினும் வடசொல்லினும் மேலை
உயிரீறும் ஒற்றீறுமான புணரியலோத்துக்களில் தோன்றல் திரிதல் கெடுதல் இயல்பென
ஓதிய புணர்ச்சியிலக்கணங்களில் மாறுபட்டுவருவனவும் இலக்கணப்போலிமொழிகளும்
மரூஉமொழிகளும் இருவகைவழக்கின்கண்ணும் நடக்கும்முறைமையையறிந்து அதற்குப்
பொருந்துமாறு புணர்க்கை 3கற்றுவல்லோ ரெல்லார்க்கும் கடன்எ - று.

     வ - று. ஆன்கன்று 4மான்றலை, கோன்குணம், வண்டின்கால், நாயின்கால்,
தேரின்செலவு, யாழின்புறம் என வேற்றுமைக்கண் சாரியையிடைச்சொற்கள் இயல்பாயின.
தடந்தோள் என அகரவீற்று