106

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
2குன்றக்கூகை (குறுந். 153), சாத்தனுக்கு. “கேழ லட்ட 3பேழ்வாயேற்றை” (அகநா. 8),
“துறுகன் 4மறையினு முய்குவை போலாய்” (புறநா. 300), ஆன்கன்று என
முறையேகாண்க.

     ‘பிற’ என்றதனானே மற்று வருவனவும்கொள்க.

     (பி - ம்.) 1அன்னபிறவும் 2வானமதி 3பேழைவாய் 4முழையினும்

(5)

(244)

எல்லா மென்ப திழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே
அன்றே னம்மிடை யடைந்தற் றாகும்.

     எ - ன், ஒருசார் 1சாரியைபெறுமாறுணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) எல்லாமென்னும்பெயர் அஃறிணையானகாலை அற்றுச் சாரியையும்
உருபின்மேலே உம்மும் பெறும்; 2உயர்திணையானகாலை இடையே நம்முச்சாரியையும்
உருபின்மேலே முன்போல் உம்மும் பெற்று முடியும் எ - று.

     வ - று. எல்லாவற்றையும், எல்லாவற்றொடும் எ - ம், எல்லாவற்றுக்கோடும்;
செவியும், தலையும், புறமும் எ - ம் அஃறிணைக்கண் உருபினும் பொருளினும் அற்றும்
உம்மும் வந்தன. எல்லாநம்மையும் எல்லா நம்மொடும் எ - ம், எல்லாநங்கையும்;
செவியும், தலையும், புறமும் எ - ம் உயர்திணைக்கண் உருபினும் பொருளினும் நம்மும்
உம்மும் வந்தன.

     (பி - ம்.) 1சாரியையாமாறு 2உயர்திணை விரவுத்திணைகளான காலை

(6)

(245)

எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப்
புல்லு முருபின் பின்ன ரும்மே.

     இதுவுமது.

     (இ - ள்.) இவ்விருவகைச்சொல்லினும் ஈற்றில்நின்ற உம்மையை யழித்து முறையே
தம்மும் நும்மும்சார உருபின்பின்னே உம்மைபுணரும் எ - று.

     வ - று. எல்லார்தம்மையும், எல்லீர்நும்மையும் 1எ - ம், எல்லார் தங்கையும்,
எல்லீர்நுங்கையும் 2எ - ம் உருபினும் பொருளினும் சாரியையும் உம்மும் வந்தன.

     எல்லாரையும் எல்லீரையும், எல்லார்கையும் எல்லீர்கையும், 3எனச் சாரியையை
இடையில் ஏலாதும்வரும்.

     (பி - ம்.) 1என உயர்திணைக்கண்ணே தம்மும் நும்மும் உருபின் மேல்
உம்மும்பெற்றன 2எனப் பொருளினும் பெற்றன 3என ஏலாது வந்தன

(7)