பாயிரம்

11

   
      (இ - ள்.) அன்னமும் பசுவும்போல்வார் தலைமாணாக்கர்; 1மண்ணும்
கிளியும்போல்வார் இடைமாணாக்கர்; இல்லிக்குடம், ஆடு, எருமை,
பன்னாடைபோல்வார் கடைமாணாக்கர். எ - று.
     இவரியல்பு விரித்துரைத்துக்கொள்க.
     (பி - ம்.) 1பசுமண்ணும்

(37)

கற்பிக்கப்படாதோர்

 

(38)

களிமடி மானி காமி கள்வன்
பிணிய னேழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் றென்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் றறுகணன் பாவி

5

படிறனின் னோர்க்குப் பகரார் நூலே.
     (இ - ள்.) 1இவர் கற்பிக்கப்படாமாணாக்கர் எ - று.
     (பி - ம்.) 1இவர்கள்.

(38)

5. பாடங்கேட்கும்முறை

(39)

கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று 1வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்

5

பருகுவ னன்ன வார்வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை 2கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்.
     (இ - ள்.) இது நூல்கேட்குமியல்பு எ - று.
     (பி - ம்.) 1வழிபட 2கேட்பவை

பயிற்சி

(40)

நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
*ஆசாற் சார்ந்தவை 1யமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்

5

வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை
கடனாக் கொளினே 2மடநனி யிகக்கும்.

     * இவ்வடி சிலபிரதிகளிலில்லை.