5. - உருபுபுணரியல்

111

   
 

(255)

புள்ளியு முயிரு மாயிறு சொன்முன்
தம்மி னாகிய தொழின்மொழி வரினே
வல்லினம் விகற்பமு மியல்பு மாகும்.
     எ - ன், மூன்றாம் 1வேற்றுமைத்தொகைக்கு ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒற்றும் உயிரும் ஈறாகியசொன்முன் தம்மினாகிய தொழிற்
சொல்வந்தால், வல்லெழுத்து விகற்பமாயும் இயல்பாயும்வரும் எ - று.

     வ - று. நாய்கோட்பட்டான், நாய்க்கோட்பட்டான், புலிகோட்பட் டான்
புலிக்கோட்பட்டான், வளிகோட்பட்டான், வளிக்கோட்பட்டான்எ - ம்,
நாய்கௌவப்பட்டான், புலிகௌவப்பட்டான்; சாரப்பட்டான், தீண்டப்பட்டான்,
பாயப்பட்டான் எ - ம் வரும்.

     பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

     (பி - ம்.) 1 (1) வேற்றுமைதொகுத்துணர்த்துதல்; (2) வேற்றுமைத்
தொகையுணர்த்துதல்

(17)

 

(256)

இதற்கிது 1முடிபென் றெஞ்சா தியாவும்
விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே.

     எ - ன், இவ்வதிகாரத்துட் சொன்னபொருட்கெல்லாம் ஏற்பதோர்
புறநடையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வதிகாரத்துட் சொல்லாத எழுத்திலக்கணமாய் வருவனவெல்லாம்
இதுவே விதியாக ஈண்டே சொல்லிக்கொள்க எ - று.

     வ - று. 2 “உருவே யுணர்வே யொலியே 3 தன்மை, யெனவீ ரெழுத்து மீரிரு
பகுதிய.” (1); “காணப் பட்ட வுருவ மெல்லா, மாணக் காட்டும் வகைமை நாடி, வழுவி
லோவியன் கைவினை போல, வெழுதப் படுவ துருவெழுத் 4தாகும்” (2);
“கொண்டவோர் குறியாற் கொண்டவதனை, யுண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும்.”
(3) ; “இசைப்படு புள்ளி னெழாஅல் போலச், செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்”
(4); “முதற்கா ரணமுந் துணைக்கா ரணமுந், துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வு,
மவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின், மிடற்றுப்5 பிறந்திசைப்பது தன்மை
யெழுத்தே” (5) (யா - வி. உரை) என்னும் இப்பகுதியுள் ஒலியெழுத்தே
செவிப்புலனாய்ப் பொருள்தருஞ் சிறப்புநோக்கி, அதனை எடுத்தோதினார்;
ஒழிந்தனமூன்றும் ஈண்டே உரைத்துக்கொள்க. இவ்வாறன்றி “வடிவுபெயர் தன்மை
யுண்முடிவு நான்காய், நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே”; “கட் 6புல னல்லாக்
கடவுளைக் காட்டுஞ், சட்டகம் போலச் செவிப்புல வொலியை, யுட்கொளற் கிடுமுரு
பாம்வடிவெழுத்தே”; “வடிவுமுதன் மும்மையின் வழங்கு மெழுத்திற், படுபல பகுதிக்
கிடுபெயர் பெயரே.”; “தான முயற்சி 7தரக்கொளச்