(இ - ள்.) இவ்வகையொழுகல் நூல்பயிறலாவது எ - று. (பி - ம்.) 1யமைவுற. 2மடனனி. |
| (40) |
| (41) | ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே. |
| (42) | முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். |
| (43) | ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் காற்கூ றல்லது 1பற்றல னாகும். |
| (44) | அவ்வினை யாளரொடு பயில்வகை 2யொருகாற் செவ்விதி னுரைப்ப வவ்3விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும். |
(இ - ள்.) 4இவ்வாறொழுகுவர் நூல்கற்பவர் எ - று. (பி - ம்.) 1பற்றிலனாகும்; பற்றலவாகும் 2யொருபால் 3விருபாலும் இவ்வாறு நூல் கற்கப்படுவது; இவ்வாறொழுகல் நூற்கியல்பு. |
| (41-4) |
| வழிபாடு |
| | (45) | அழலி னீங்கா னணுகா னஞ்சி நிழலி 1னீங்கா னிறைந்த நெஞ்சமோ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே. |
(இ - ள்.) இவ்வாறொழுகல் வழிபாடாவது எ - று. (பி - ம்.) 1னீங்கா நிறைந்த |
| (35) |
| சிறப்புப்பாயிரம் |
| | (46) | ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ 1டாயவெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. |
| (47) | காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே. |
(இ - ள்.) இப்பதினொன்றும் சிறப்புப்பாயிரமாம் எ - று. சிறப்பென்றது ஈண்டு ஒன்றற்கேயுரியதென்றவாறு. (பி - ம்.) 1டாயெண் |
| (46-7) |