120

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வினையை முற்கூறினார், பெயரால் திணைபாலறிதல் சிறுபான்மைத் தென்பதூஉம்,
சாந்தரைக்கும், பூத்தொடுக்கு மென்றற்றொடக்கத்து ஒருசார் வினைகள் ஆண்பால்
பெண்பால் விளக்காவென்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க. மேற்
பெயர்வினையோத்துக்களிலே திணைபால் விளங்குமேனும் தொகைவகையான் அறிதற்கு
ஈண்டு இவ்வாறு சொன்னாரெனக்கொள்க.

     (பி - ம்.) 1 (1) திணைபாலிரண்டும்தெரிவதற்கு, (2) திணைபாலையந் தெரிதற்கு2
வினைமுற்றாலும் 3 மைந்தர்மக்கள் 4 பெறலாகாவோவெனின் 5 சொல்லுவராதலானறிக.

(8)

 

(265)

தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே.

     எ - ன், முன்னர் மூவிடமென்றார், அவை இவையென்பது உணர்த்துதல்
நுதலிற்று,

     (இ - ள்.) தன்மையும் முன்னிலையும் படர்க்கையுமென்னும் இவை
மூன்றிடமாவனவாம் எ - று.

     வ - று. யான், யாம், நான், நாமெனவும், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீரெனவும்,
அவன், அவள், அவர், அது, அவையெனவும் மூவிடப்பெயர் வந்தவாறு. உண்டேன்,
உண்டேமெனவும், உண்டனை, உண்டனிரெனவும், உண்டனன், உண்டனள், உண்டனர்,
உண்டது, உண்டனவெனவும் மூவிடவினை வந்தவாறு.

(9)

 

(266)

இலக்கண முடைய திலக்கணப் போலி
மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
இடக்க ரடக்கன் மங்கலங் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோ டாறாம் 1வழக்கியல்.

     எ - ன், மேல் வழக்கின்கண்ணு மென்றார், அஃது இஃதென்பது உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) இலக்கணநெறியால் வருவதும் 2இலக்கண மன்றெனினும்
இலக்கணமுடையதுபோல 3அடிப்பட்ட சான்றோரால் வழங்கப்பட்டுவருவதும்
இலக்கணத்திற் சிதைந்துவருவதுமென இம்மூன்றுவகையானும் வரும் இயல்புவழக்கு,
இடக்கரடக்கிச் சொல்லுவதும் மங்கலமரபினாற் சொல்லுவதும் ஒவ்வொரு குழுவிலுள்ளார்
தத்தம் குறியாக இட்டுச்சொல்லுவதுமென்னும் இம்மூவகைத் தகுதி 4வழக்கினோடுங்கூட
ஆறுவகைப்படும், வழக்குநெறி எ - று.

     வ - று. நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், சோறு, கூழ், பால், பாளிதம், தெங்கு,
கமுகு, மா, பலா, 5மாந்தர், மக்கள், மகன், மகள் என்றற்றொடக்கத்தன
இலக்கணமுடையன. இல் முனென்பதனை முன்றிலென்றும், கோவிலென்பதனைக்
கோயிலென்றும், பொதுவிலென்பதனைப் பொதியிலென்றும், கண்மீயென்பதனை
மீகணென்றும், யாவரென்பதனை யாரென்றும், 6எவனென்பதனை என்னென்றும்
இப்பெற்றியான்வருவன இலக்கணப்போலி. அருமருந்தன்னானென்பதனை
அருமந்தானென்றும், 7நாட்டு