பாயிரம்

13

   

நூற்பெயர்வகை

 

(48)

முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே.
     (இ - ள்.) இவ்வெட்டனுள் ஒன்றுபற்றிவரும் நூற்குப்பெயர் எ-று.
     அவற்றுள், முதனூலாற்பெயர்பெற்றன 1ஆரியபடலம், பாரத முதலாயின.
கருத்தனாற் பெயர்பெற்றன அகத்தியம், தொல்காப்பிய முதலாயின, அளவினாற்
பெயர்பெற்றனபன்னிருபடலம், *நாலடி நானூறு முதலாயின. மிகுதியாற்பெயர்பெற்றன
(களவியல் முதலாயின. பொருளாற் பெயர் பெற்றன அகநானூறு, புறநானூறு முதலாயின.
செய்வித்தோனாற் பெயர் பெற்றன சாதவாகனம், இளந்திரைய முதலாயின.
தன்மையாற்பெயர்பெற்றன சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் முதலாயின.
இடுகுறியாற்பெயர் பெற்றன2நிகண்டு நூல், கலைக்கோட்டுத்தண்டு முதலாயின.)

     (பி - ம்.) 1ஆரியப்படலம், 2நிகண்டுநூறலைக்கோட்டுத்தண்டு.

(48)

நூல்யாப்பு

(49)

தொகுத்தல் விரித்த றொகைவிரி 1மொழிபெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப.
     (இ - ள்.) நூலியாப்பு இந்நாற்கூற்றதாம் எ - று.
     (பி - ம்.) 1 மொழிப்பெயர்ப்பு

(49)

சிறப்புப்பாயிரம் செய்தற்குரியோர்

(50)

தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
றின்னோர் பாயிர மியம்புத 1லியல்பே.

     (இ - ள்.) இவருள் ஒருவர் பாயிரம் 2சொல்லுதலியல்பு எ - று.
     (பி - ம்.) 1 கடனே 2 செய்தல்


     * நாலடியார்; நாலடி நானூறென்னும் பெயர், யாப்பருங்கலவிருத்தி
முதலியவற்றிலும் காணப்படுகின்றது.( இறையனாரகப்பொருள்.
     ( செய்தானாற்பெயர்பெற்றன: அகத்தியம். தொல்காப்பியமென இவை;
செய்வித்தோனாற்பெயர்பெற்றன சாதவாகனம், இளந்திரையமென இவை;
இடுகுறியாற்பெயர்பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத்தண்டென இவை;
அளவினாற்பெயர்பெற்றது பன்னிருபடலமென்பது; சிறப்பினாற்பெயர்பெற்றது
களவியலென்பது (இறை. 1 - சூ. உரை).