132 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | தேவன், தேவி, மகன், மகள், மக்கள், மாந்தர், மைந்தர், ஆடூஉ, மகடூஉ, நாகன், நாகி, யானை, குதிரை, ஆமா, நாய், நரி, மயில், குயில், பொன், மணி, மரம், பனை, தெங்கு, நீர், வளி, நெருப்பு எ - ம், வான், நிலம், அகம், புறம், கீழ், மேல், குழி, அவல் எ - ம், ஊழி, யாண்டு, அயனம், இருது, மதி, பக்கம், நாள், இரா, பகல், யாமம், நாழிகை, மாத்திரை எ - ம், கை, கால், தலை, சினை, தளிர், பூ, காய் எ - ம், வட்டம், சதுரம், குறுமை, நெடுமை, கருமை, சிவப்பு, தண்மை, வெம்மை, கைப்பு, இனிப்பு, புளிப்பு, விரை, மணம், உண்மை, இன்மை, நன்மை, தீமை, வன்மை, மென்மை எ - ம், 2ஊண், தீன், உணல், தினல், உணப்படல், தினப்படல், ஏவப்படல், 3உணப்பாடு, தினப்பாடு எ-ம் வரும் இத்தொடக்கத்தன பொருளாதி அறுபொருளிடுகுறி மரபுகாரணப்பெயர். அவன், அவள், அவர்; அந்நிலம், அந்நாள், அக்கை, அக்குணம், அவ்வூண் எ - ம், எவன், எவள், எவர்; எந்நிலம், எந்நாள், எக்கை, எக்குணம், எவ்வூண் எ - ம் இவ்வாறு அவை சுட்டு வினாக்களடுத்தும்வரும்; ஏனைச் சுட்டு வினாக்களோடும் இப்படியே ஒட்டுக.
தெங்கு கடு என்றற்றொடக்கத்தன ஆகுபெயர்; அவை முன்னர்க் காட்டுதும்.
இவற்றுள்ளும் சாத்தையுடையான் சாத்தன்; பொன்னையுடையான் பொன்னனெனக்கொள்ளின் அவை காரணப்பெயராமென்க.
சங்கரன், அருகன், நான்முகன், நாராயணன், தேவன், தேவி என்னும் இத்தொடக்கத்தனவாகிய காரணப்பெயர், மக்கட்காயினும் விலங்குகட்காயினும்வரின், இடுகுறிப்பெயராமென்க. அகலம் உரையிற்கொள்க.
(பி - ம்.) 1 காரணமுமரபால்வருங்காரமும் 2 உண், தின், உணல்3 உண்பாடு, தின்பாடு | (18) | | (275) | அவற்றுள், கிளையெண் குழூஉமுதற் பலபொரு டிணைதேம் ஊர்வா னகம்புற முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலம் | | 5 | தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஓத லீத லாதிப் பல்வினை இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ | | 10 | டுற்ற னவ்வீறு நம்பி யாடூஉ விடலை கோவேள் குருசி றோன்றல் இன்னன வாண்பெய ராகு மென்ப. | எ - ன், மேல், “ஒன்றேற்பவும்” என்றார், அவற்றுள் ஆண்பாற் குரிய பெயருணர்த்தல்நுதலிற்று. | |
|
|