வென்பதுமுதலான எட்டும், இவைபோல்வன பிறவும் அஃறிணைப்பன்மைப் பாற்குரிய பெயர்களாம் எ - று.
வ - று. எப்பொருளவை, எவ்விடத்தவை, எந்நாளவை, எக்கோட்டவை, எந்நிறத்தவை, எந்நடையவை எ - ம், எப்பொருள எப்பொருளன, எவ்விடத்த எவ்விடத்தன, எந்நாள எந்நாளன, எக்கோட்ட எக்கோட்டன, எந்நிறத்த எந்நிறத்தன, எந்நடைய எந்நடையன எ - ம் வரும். இவ்வாறே 3ஏனைவினாக்களுடனும் மூன்று சுட்டுக்களுடனும் ஒட்டிப் பொருளாதியாறும் வினாச்சுட்டுக்களுடன் வையீறும் அகரவீறுமாய் வந்தவாறுகாண்க. அவ், இவ், உவ் எ - ம், நிலங்கள், நீர்கள், மரங்கள், நாய்கள், நரிகள், மஞ்ஞைகள், கிள்ளைகள் எ - ம், இரண்டு, பத்து, நூறு, ஆயிரம் எ - ம், உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில எ - ம் வந்தவாறு காண்க. ‘இன்னவும்’ என்றதனால், உள்ளவை, இல்லவை, நல்லவை, தீயவை, மற்றையவை, மற்றையன, மற்றைய, பிற என்றற்றொடக்கத்தனவும் கொள்க.
(பி - ம்.) 1 இன்னன 2 எய்திய 3 ஏனைவினாச்சுட்டுக்களிலும் | (23) | | | (280) | பால்பகா வஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய. | எ - ன், அஃறிணைப்பெயர்க்கு ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அஃறிணைப்பெயர்களுள், மேற் பால் பகுத்துரைத்தவையொழித்து ஒழிந்த பெயர்களனைத்தும் ஒருமைபன்மைகட்குப் பொதுவாய் நிற்பனவாம் எ - று.
வ - று. மரம்வளர்ந்தது மரம்வளர்ந்தன, மாவந்தது மாவந்தன எனக் காண்க. | (24) | | | (281) | முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும் சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டும் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர். | எ - ன், இருதிணைக்குமுரிய பெயருணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) முதற்பெயர்முதலான ஒன்பது கூற்றுப்பெயர்களும் இருதிணைக்கும் பொதுவான பெயர்களாம் எ - று.
‘பெயர்’ என்பதனை, ‘முறையிரண்டும்’ என்பதுமுதல் எல்லாவற் றோடும் கூட்டியுரைக்க. | (25) | | | (282) | ஆண்மை பெண்மை யொருமை பன்மையின் ஆமந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர். | எ - ன், மேல் தொகைப்படுத்துரைத்தபெயர்களை, 2 வகைப்படுத்து உணர்த்துதல் நுதலிற்று. | |
|
|