| 138 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (இ - ள்.) ஆண்மைப்பெயர்முதலான நான்கினானே மேற்சொன்ன முதற்பெயர் முதலான மூன்றுள் ஒவ்வொன்றும் நந்நான்காம்; ஆண்மை 2 பெண்மையானே முறைப்பெயர் இரண்டாம் எ - று.
என்றது : ஆண்மைமுதற்பெயர், பெண்மைமுதற்பெயர், ஒருமை முதற்பெயர், பன்மைமுதற்பெயர் எ - ம், ஆண்மைச்சினைப் பெயர், பெண்மைச்சினைப்பெயர், ஒருமைச்சினைப்பெயர், பன்மைச்சினைப்பெயர் எ - ம், ஆண்மைச்சினைமுதற்பெயர், பெண்மைச்சினைமுதற்பெயர், ஒருமைச்சினைமுதற்பெயர், பன்மைச்சினைமுதற்பெயர் எ -ம், ஆண்மைமுறைப்பெயர், பெண்மைமுறைப்பெயர் எ - ம் வருமென்றவாறு. ஏனையபோக்கிச்சொல்லுதும்.
வ - று. சாத்தன், சாத்தி, கோதை, யானை இவை முதற்பெயர்; யானையென்பது எல்லாவற்றிற்குமுரித்து. முடவன், முடத்தி, செவியிலி, நெடுங்கழுத்தல் (ஒட்டகம்) இவை சினைப்பெயர். முடக்கொற்றன், முடக்கொற்றி, கொடும்புறமருதி, 3பெருங்கால்யானை இவை சினைமுதற்பெயர். தந்தை, தாய் இவை முறைப்பெயர். பிறவும் இவ்வாறறிந்துகொள்க.
(பி - ம்.) 1 வகுத்துணர்த்துதல் 2 பெண்மையான 3 நெடுந்தாள்யானை | (26) | | | (283) | 1அவற்றுள், ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும். | எ - ன், மேல் 2 ஆண்மை முதற்பெயர்முதலாக வகுத்தவற்றை இருதிணைப்பாலுள்ளும் இன்னது இன்னபாற்குரித்தென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஆண்மைமுதற்பெயர்முதலாகச் சொல்லப்பட்ட இப்பதினாலுள்ளும் ஒருபெயரே இருதிணையிடத்துவரும் தன்பாலனைத்தையும் விளக்கும் எ - று.
வ - று. அவை : சாத்தன், முடவன், முடக்கொற்றன், தந்தை யென்பன வந்தான், வந்தது எ - ம், சாத்தி, முடத்தி, முடக்கொற்றி, தாய் என்பன வந்தாள், வந்தது எ - ம், கோதை, செவியிலி, கொடும்புறமருதி யென்பன வந்தான், வந்தாள், வந்தது எ - ம், யானை, நெடுங்கழுத்தல், பெருங்கால்யானை யென்பன வந்தான், வந்தாள், வந்தது, வந்தன எனவும் வரும்.
(பி - ம்.) 1 இவற்றுள் 2 ஆண்மைபெண்மைமுதலாக | (27) | | | (284) | தன்மை யானான் யாநா முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது. | எ - ன், மேல் “தன்மை நான்கு முன்னிலை யைந்தும்” என்றார், அவை இவையென்பதும், ஏனைப்பெயர்கள் எவ்விடத்தவாங்கொலென்னும் ஐயமறுத்தலும் உணர்த்துதல் நுதலிற்று. அன்றி, 1 எல்லாப்பெயர்க்கும் இடமடைத்தல் நுதலிற்றெனினுமமையும். | |
|
|