சிறப்புப்பாயிரம் பிறர்செய்தற்குக் காரணம் |
| (51) | தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்றற் புகழ்த றகுதி யன்றே. |
(இ - ள்.) நூல்செய்தோன் பாயிரஞ்செய்தல் இயல்பன்று எ - று. |
(51) |
| (52) | மன்னனுடை மன்றத் தோலைத் தூக்கினும் 1 தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் 2 மின்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் |
| 5 | தன்னைப் 3புகழ்தலுந் தகும்புல வோற்கே. |
(இ - ள்.) 4 நூல்செய்தோன் பாயிரஞ்செய்யிற் றன்னைப்புகழ்ந் தானாம்; ஆகவே தன்னைப்புகழ்தல் தகுதியன்றென்றார்; ஈண்டுச் சொன்ன 5 இடங்களினாயின், தன்னைப் புகழ்தலும் தகும் எ - று. இவ்விரண்டு சூத்திரமும் * 6 பனம் பாரம். (பி - ம்.) 1 தன்னிடை 2 மன்னிய 3 புகழ்வதும் 4 மேல்நூல்செய்தவன் 5 இடங்களிற்றன்னை 6 பனம்பாரனார்; பனம்பாரனம்; பன்னிபாரம். |
(52) |
பாயிரம் நூற்கு இன்றியமையாததென்பது |
| (53) | ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே. |
(இ - ள்.) அளவிறந்த இடத்ததாய்ப் பரந்ததாயினும் பாயிரமில்லாதது நூலன்று எ - று. ஈண்டுப் பாயிரமென்றது சிறப்புப்பாயிர மென்றுணர்க. |
(53) |
| (54) | மாடக்குச் சித்திரமு 1 மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற 2 வணிந்துரையை யெந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. |
எ - ன். இஃது அச்சிறப்புப்பாயிரத்தைச் சிறப்பித்ததெனக் கொள்க. அஃதேல் நூல்கேட்கப்புகுந்தார்க்குப் புறவுரைகேட்டுப் பயன் என்னையோவெனின்,கொழுச்சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோலப் பருப்பொருட்டாகிய பாயிரங்கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்குமென்பதனாலும், 3‘சிலவெழுத்தினானியன்ற நூற்கு இன்றியமையாத பாயிரமறியாதாய்! |