| 140 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | கண் என 2உருபேற்றலின், வினைப்பெயராய் மூவிடத்திற்கும் உரியவாயின. பிறவுமன்ன. இவை பெயராயினபொழுது 3உருபேற்றுநிற்கும்; வினையாயின பொழுது பொருண்முற்றிப் பெயர்கொண்டுமுடியும். இது தம்முள் வேற் றுமையெனக்கொள்க.
(பி - ம்.) 1 மூவிடத்திற்குமாவனவாம். 2 உருபேற்றுவினைப்3 உருபேற்கும் | (29) | | | (286) | தான்யா னானீ யொருமை பன்மைதாம் யாம்நா மெலாமெலீர் நீயிர்நீர் நீவிர். | எ - ன், மேற்சொன்ன, ‘எல்லாந் தாந்தான்’ என்பனவற்றிற்கும் தன்மைமுன்னிலைப் பெயர்கட்கும் பால்வகுத்தல் நுதலிற்று.
(இ - ள்.) தான் யான் நான் நீயென்பன ஒருமைப்பாலாவனவாம்; ஒழிந்தன பன்மைப்பாலாவனவாம் எ - று.
வ - று. 1தான்வந்தான், யான்வந்தேன், நான்வந்தேன், நீவந்தாய் எ - ம், தாம்வந்தார், ‘யாம்வந்தேம், நாம்வந்தேம், யாமெல்லாம் வந்தேம், எல்லீரும் வந்தீர், நீயிர்வந்தீர், நீர்வந்தீர், நீவிர்வந்தீர்எ - ம் வரும்.
(பி - ம்.) 1 யாம்வந்தோம், நாம்வந்தோம், யாமெல்லாம் வந்தோம் | (30) | | | (287) | ஒருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில. | எ - ன், இவ்விருபெயர்கட்கும் ஆவதோர்விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருபெயரும் இவ்வியம்பிய வாய்பாட்டால்நிற்றலன்றி இருவன் மூவன் இருத்தி முத்தியென்பன 1முதலாக மேல்வரும் எண்களைக் கொள்ளா எ - று.
(பி - ம்.) 1 முதலானஎண்களை | (31) | | | (288) | ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப. | எ - ன், இருபாற் பொதுச்சொன்முடிபுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒருவரென்னும்பெயர், உயர்திணையாண்பால் பெண்பா லிரண்டிற்கும் பொதுவாய் ஒருபொருளைத் தருமெனினும் பன்மை வினை கொண்டு முடியும் பகுதித்தென்று சொல்லுவர் புலவர் எ - று.
வ - று. பார்ப்பாரொருவர்வந்தார், பார்ப்பனியாரொருவர் வந்தார் எனவரும். | (32) | | | (289) | பொருண்முத லாறோ டளவைசொற் 1றானி கருவி காரியங் கருத்த னாதியுள் ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன வாகு பெயரே. | |
|
|