| 144 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | 2உம்மை எண்ணும்மை.
வ - று. சாத்தனது, சாத்தனதை, சாத்தனதால், சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதனது, சாத்தனதன்கணெனவரும்.
விளியேலாதெனினும் உருபேற்றலிற் குறைபட்டதாகாது; சில உறுப்பிற் குறைபட்டாரும் மக்களெனப்படுவர், அதுபோலவென்பது.
பெயர்வேற்றுமையும் ஏனையுருபுகளையும் ஏற்குமால், அஃது ஒழித்த தென்னையோ வெனின், பெயர் எழுவாயுருபாவது தன்பயனிலை தோன்ற நின்றகாலையன்றே; ஆண்டுப் பிறவுருபுகளையேலாது; ஏற்பின் தன் பொருண்மையும், ஏற்கும் உருபின்பொருண்மையும் ஒருங்குடைத்தாதல் வேண்டும்; அதனாற் பயனிலைகொள்ளாது நின்ற பெயரே உருபுகளை ஏற்குமெனக்கொள்க.
(பி - ம்.) 1உருபுகளேற்கும் 2உம் எண்ணும்மை | (36) | | | (293) | நீயிர் நீவிர்நா னெழுவா யலபெறா. | எ - ன், மேல் “ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீறாய்” என்றார்; எனவே ஏலாப்பெயருமுளவென்பதுமாயிற்று; அவை இவையென்பது உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) இம் 1மூன்றுபெயரும் எழுவாயுருபினையொழிய ஏனையுருபுகளையேலா எ - று.
(பி - ம்.) 1மூவகைப்பெயரும் | (37) | | | (294) | அவற்றுள், எழுவா யுருபு திரிபில் பெயரே வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே. | எ - ன், நிறுத்தமுறையானே பெயர்வேற்றுமையது இலக்கண முணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேற்சொன்ன எட்டனுள்ளும் முதல்வேற்றுமைக்கு உருபாவது திரிபு யாதுமின்றிநிற்கும் பெயர்தானேயாம்; வினையையும் பெயரையும் வினாவையுங்கோடல் அதற்குப் பொருணிலையாம் எ - று.
வினைபெயரென்று பொதுப்பட வைத்தமையான், வினைமுற்றுக் குறிப்புமுற்றுப் பெயரெச்ச வினையெச்சங்களினும் 1இருதிணையைம்பால் மூவிடத்துப்பெயர்களினும் இவற்றின் பொதுப்பெயர்களினும் ஏற்பனவெல்லாம் கொள்க.
ஏகாரஓகாரங்கள் இடைச்சொல்லாய் இவற்றுளடங்காமையின் வினாவென வேறெடுத்தோதினாரென்க. மேலே உருபுசொல்லி ஈண்டுஞ் சொல்லுதல் கூறியதுகூறலென்னும் குற்றமாம்பிறவெனின், ஆண்டுப் பெயரும் முறையும் சொன்னார்; ஈண்டு வேற்றுமைக்குவரும் இலக்கண மெல்லாம் சொன்னாராதலின் ஆகாதென்க. இக்கடா விடை மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். | |
|
|