150

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(299)

ஆற னொருமைக் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப்
பொன்றன் கூட்டம் பலவி னீட்டம்
திரிபி னாக்க மாந்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே.

     எ - ன், நிறுத்தமுறையானே ஆறாம்வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஆறாம்வேற்றுமையின் 1ஒருமைப்பொருண்மைக்கு2 அதுவும் ஆதுவும்,
பன்மைப்பொருண்மைக்கு அவ்வும் உருபாம். பண்பும் உறுப்பும் ஒருபொருட்டிரட்சியும்
பலபொருட்டிரட்சியும் ஒன்று திரிந்து ஒன்றாதலுமாகும் 3ஐந்துதற்கிழமையும்
பிறிதின்கிழமையும் போற்றுதல் அதற்குப்பொருளாம் எ - று.

      “ஆற னுருபே 4யதுவா தவ்வும், வேறொன் றுரியதைத் தனக்குரி யதையென,
விருபாற் கிழமையின் 5மருவுற வருமே, ஐம்பாலுரிமையு மதன்றற் கிழமை” என்றார்,
அகத்தியனார்.

     வ - று. சாத்தனது இயல்பு; இளமை, வன்மை, குறுமை, உண்மை, நன்மை, நிறம்,
உணர்வு, கல்வி, கேள்வி என்பவை பண்புத்தற்கிழமை; சாத்தனதுசெலவு, நிலை,
இருக்கை, உணவு, செய்கை 6என்றற்றொடக்கத்து வினைகளும் ஈண்டுத்
தொழிற்பண்பாயடங்குமெனக்கொள்க. சாத்தனதுகை, யானையதுகோடு, வாழையதுபழம்,
7தேரதுதட்டு, செய்யுளதடி என்பன உறுப்புத்தற்கிழமை; நெல்லது குப்பை, எள்ளது
ஈட்டம், கொள்ளதுகுழாம், ஆனையதுதொகை, மாந்தரதுதொகுதியென்பன ஒன்றன்
கூட்டத்தற்கிழமை; படையது தொகை, விலங்கினது ஈட்டம், மரத்ததுகுழாமென்பவை
8பலவினீட்டத்தற்கிழமை; கொள்ளதுநூறு, எள்ளது சாந்து, நெல்லதுசோறு,
பயற்றதுகும்மாயமென்பவை திரிபுத்தற்கிழமை; சாத்தனதுஆடை, அரசனதுஆழி,
ஆவினதுகன்று, கபிலரதுபாட்டு என்பவை பிறிதின்கிழமை. 9எனாதுகை, தனாதுதாள்,
நினாதுநிறம் எ - ம், எனாதெயில், நினாதுநிலம், தனாதுதரை எ - ம்
இருகிழமைக்கண்ணும் அதுவும் ஆதுவும் வந்தவாறு. எனகைகள், நினதோள்கள்,
தனதாள்கள் எ - ம், எனயானைகள், நினநிரைகள், தனதானைகள், “உய்த்துச்,
சொரியினும் போகா தம” (குறள். 376)

     எ - ம் இருகிழமைக்கண்ணும் அகரவுருபுவந்தவாறு.

     (பி - ம்.) 1ஒருமைக்கு 2அதுவென்பதுவும் ஆதென்பதுவும் 3இந்த ஐந்து,
4அதுவும் ஆதுவும் வேறொன்றுடையதை 5பொருளுற்றுவருமே 6என்றற்றொடக்கத்தன
7தேரதுசெதிள், தட்டு, தடி 8 (1) பலகுழீஇய தற் கிழமை; (2) பலவியற்றற்கிழமை 9எனது,
எனாது..........

(43)

 

(300)

ஏழ னுருபு கண்ணாதி யாகும்
பொருண்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப.