எ - ன், னகாரவீற்றஃறிணைப்பெயர் பொதுப்பெயர்கட்கு எய்தியதன் மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) னகாரவீற்று அஃறிணைப்பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க் கண்ணும் இறுதியழிவும் இறுதியழிவதனோடு அயல்நீட்சியும் விளியுருபாம் எ - று.
வ - று. “கொடுந்தா ளலவ குறையா மிரப்பேம்” (ஐந். ஐம். 42), “இகலுபு குதிக்கு மிகல”, “கண்டல் வேரளை சேரல வாநீ”, 1 “கடும் பறைக் கருடா” எ - ம், சாத்தகேள் கொற்றகேள், சாத்தாகேள், கொற்றாகேள் எ - ம் வரும்.
(பி - ம்.) 1 கடுஞ்சிறைக் | (54) | | (311) | லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண் ஈற்றய னீட்சியு முருபா கும்மே. | எ - ன், இவ்விரண்டீற்றுப்பெயர்க்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) லகார ளகாரவீற்று அஃறிணைப்பெயர்க்கண்ணும் பொதுப் பெயர்க்கண்ணும் ஈற்றயல் நீட்சியும் உருபாம் எ - று.
வ - று. “காட்டுச்சாரோடுங்குறுமுயால்”, கிளிகாள் எ - ம், தூங்கால், 1ஓங்கால், மக்காள் எ - ம் வரும்; பிறவுமன்ன.
(பி - ம்.) 1 ஒதுங்கால் | (55) | | (312) | அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையின் அளபும் புலம்பி னோவு மாகும். | எ - ன், உரைத்தவிளிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்) அணியாரை விளிக்குமிடத்து இயல்பும் ஈற்றினது அழிவும், சேயாரைவிளிக்குமிடத்து அளபெழலும், புலம்பின்கண் ஓகாரமுமாம் எ - று.
உதாரணம் முன்னர்க்காட்டினவற்றிற் கண்டுகொள்க. | (56) | | (313) | நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர வைதுத் தாந்தா னின்னன விளியா. | எ - ன், மேல் விளியேற்குமென்ற ஈற்றுப்பெயர்களுள் இவை ஏலாவென எடுத்துணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) நுவ்வையும் முதல்வினாக்களையும் சுட்டையுமுதலாகவுடைய னகாரமே ளகாரமே ரகாரமே வையே துவ்வேயென்றீற்றுப் பெயர்களும் தாமென்பதும் தானென்பதும் விளியேலா எ - று.வ - று. நுமன், நுமள், நுமர்; எவன், எவள், எவர், எவை, எது; ஏவன், ஏவள், ஏவர், ஏவை, ஏது; யாவன், யாவள், யாவர், யாவை, யாது; | |
|
|