158

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
அவன், அவள், அவர், அவை, அது; இவன், இவள், இவர், இவை, இது; உவன், உவள்,
உவர், உவை, உது; தாம்; தான் என்பன.

     ‘இன்னன’ என்றதனால், மற்றையான், மற்றையாள், மற்றையார், மற்றையவை,
மற்றையதென்பனவும், எண்ணிறையளவுப்பெயர் முதலா யினவுங்கொள்க.

     நுவ்வையும் செவ்வெண்ணாக எண்ணாது ஒடுக்கொடுத்து வேறோதியது, வையும்
துவ்வும் அதனொடு சாராவென்பது அறிவித்தற்கெனக்கொள்க.

(57)

 

(314)

முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் 1காயிற் சினைக்கை யாகும்.

     எ - ன், இஃதோர் சொல்லுதல் 2வகைமையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) சினைதொடர்ந்த முதற்பொருட்கு இரண்டாம் வேற்றுமையுருபுவரிற்
சினைக்கு ஏழானுருபுவரும்; முதற்குஆறாமுருபுவரிற் சினைக்கு இரண்டனுருபுவரும் எ-று.

     வ - று. 3யானையைக் கோட்டின்கட்குறைத்தான் எ - ம், யானையது
கோட்டைக்குறைத்தான் எ - ம் வரும்.

     ‘ஐயுற’ என்னாது, ‘ஐயுறின்’ என்றதனால், யானையைக் கோட்டைக்
குறைத்தானெனவும் வருமெனக்கொள்க.

     (பி - ம்.) 1காகிற் 2வழுவமைப்புணர்த்துதல் 3ஆனையை

(58)

 

(315)

முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும்.

     இதுவுமது.

     (இ - ள்.) இவையேமுதல், இவையேசினையென வேறறியக் கிடப்பனவில்லை;
சொல்லுவோர் குறிப்பினானே முதலே சினையுமாம்; சினையே முதலுமாம்;
பிண்டப்பொருளும் அவ்வாறேயாம் எ - று.

     வ - று. கோட்டதுநுனியைக்குறைத்தான் எ - ம், கோட்டை நுனிக்கட்
குறைத்தான் எ - ம் சினையேமுதலுமாம். நெற்குப்பை யென்றால், நெல்லதுகுப்பை
குப்பையதுநெல்லென வரும். இதில் இரண்டாவது வேறில்லாதவாறுகாண்க.

(59)

 

(316)

யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்.

     எ - ன், உருபுகள் ஒருவழித் தம்பொருண்மேலன்றி 1மயங்கி வருதலுமுடையவென
வழுவமைப்புணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) யாதானும் ஓருருபினாற் சொல்லப்பட்டதே ஒரு சொல்லெனினும்
அச்சொற்கு அவ்வுருபின்பொருளே பொருளென்று கொள்ளற்க; அச்சொல்லின்பொருள்
எவ்வுருபிற்கேற்கும்? அவ்வுருபாகக்கொள்வதே முறை எ - று.