| (320) | பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே. | எ - ன், வினைச்சொலென்பது வினையும் வினைக்குறிப்புமென இரண்டு; அவற்றுள், வினையாவது உணர்த்தினார், இது வினைக்குறிப்பாவது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலென்னுமாறும் இடமாகத்தோன்றி மேற் கருத்தாமுதலாகச்சொன்ன ஆறனுட் கருத்தா ஒருவனையுமே காட்டிநிற்றல், வினைக்குறிப்பிற்கு இயல்பாவது எ - று.
வினையைக்குறிப்பாக உடைமையின், வினைக்குறிப்பு.
வ - று. குழையினன், குழையினள், குழையினர், குழையிற்று, குழையின; குழையினேன், குழையினேம்; குழையினை, குழையினீர் எ - ம், அகத்தினன், அகத்தினள், அகத்தினர், 1அகத்தது, அகத்தன; அகத்தினேன், அகத்தினேம்; அகத்தினை, அகத்தினீர் எ - ம், நாளினன், நாளினள், நாளினர், நாளிற்று, நாளின; நாளினேன், நாளினேம்; நாளினை, நாளினீர் எ - ம், கண்ணினன், கண்ணினள், கண்ணினர், கண்ணிற்று, கண்ணின; கண்ணினேன், கண்ணினேம்; கண்ணினை, கண்ணினீர் எ - ம், கரியன், கரியள், கரியர், கரியது, கரியன; கரியேன், கரியேம்; கரியை, கரியீர் எ - ம், செலவினன், செலவினள், செலவினர், செலவிற்று, செலவின; செலவினேன், செலவினேம்; செலவினை, செலவினீர் எ - ம் முறையே காண்க.
(பி - ம்.) 1 அகத்திற்று | (2) | | (321) | அவைதாம், முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். | எ - ன், மேற்சொன்ன வினை வினைக்குறிப்புகட்கு எய்தியதோர் விதி உணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) மேல் வினையும் வினைக்குறிப்புமென்று சொல்லப்பட்ட இரண்டும், முற்றென்றும் பெயரெச்சமென்றும் வினையெச்சமென்றுமாகி, ஒருதிணைக்கே உரியவும் 1இருதிணைக்குமுரியவும் ஒருபாற்கே உரியவும் பலபாற்குரியவும் ஓரிடத்திற்கேயுரியவும் பலவிடத்திற்குரியவுமாம் எ - று.
உதாரணம் தத்தம் சிறப்புவிதிச்சூத்திரங்களுட்காண்க.
(பி - ம்.) 1 பலதிணைக்கும் | (3) | | (322) | பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதலறு பெயரல தேற்பில முற்றே. | |
|
|