| (323) | ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும் ஒருமை பன்மையைத் தன்மைமுன் னிலையினும் முக்கா லத்தினு முரண முறையே மூவைந் திருமூன் றாறாய் முற்று | | 5 | வினைப்பத மொன்றே மூவொன் பானாம். | எ - ன், முற்றுவினையின் வகையும் தொகையுமுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்னும் ஐம்பாலையும் படர்க்கையிடத்தும் ஒருமை பன்மைப்பால்களைத் தன்மையிடத்தும் முன்னிலையிடத்தும் முக்காலங்களாலுமாற முறையே படர்க்கைவினைமுற்றுப் பதினைந்தும் தன்மைவினைமுற்று ஆறும் முன்னிலைவினைமுற்று ஆறும் ஆக வினைமுற்றொன்றே இருபத்தேழுகூறாம் எ - று.
எனவே இதனானும் தன்மைமுன்னிலைகளில் ஒருமை பன்மைப்பால்களல்லது ஏனைப்பால்கள் இல்லையென்பதுமாயிற்று. | (5) | | (324) | அன்னா னிறுமொழி யாண்பாற் படர்க்கை. | எ - ன், நிறுத்தமுறையானே முற்றைவிரித்துணர்த்துவான் தொடங்கினார், இச்சூத்திரம் ஆண்பாற்படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருவிகுதியையும் ஈறாகவுடையமொழிகள் ஆண்பாற் படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம் எ - று.
பொதுவாகவைத்தமையான், வினையும் குறிப்புங்கொள்க.
எச்சங்களை மேலே விதந்தோதலின், விதவாது வருவனவெல்லாம் ஈண்டு முற்றென்றே கொள்க.
வ - று. வந்தனன், வந்தான்; வாராநின்றனன், வாராநின்றான்; வருவன், 1வருவான் எ - ம், பூணினன், பூணினான்; புறத்தன், புறத்தான்; ஆதிரையன், “ஆதிரையான்” (முத். கட.), கண்ணினன், கண்ணினான்; பொன்னன்னன், பொன்னன்னான், வரவினன், 2வரவினான் எ - ம் வினையும் குறிப்பும் வந்தன; அவனென்னும் பெயர்தந்து முடிக்க.
(பி - ம்.) 1வருவானவன் 2வரவினானவன் | (6) | | (325) | அள்ளா ளிறுமொழி பெண்பாற் படர்க்கை. | எ - ன், பெண்பாற்படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்விருவிகுதியையும் ஈறாகவுடைய மொழிகள் பெண்பாற் படர்க்கைவினைமுற்றும் குறிப்புமுற்றுமாம் எ - று.
வ - று. வந்தனள், வந்தாள்; வாராநின்றனள், வாராநின்றாள்; வருவள், வருவாளென வினைமுற்று வந்தவாறு. மேலனவற்றை ளகாரமாகத் திரித்துக் | |
|
|