வந்தவாறு. பலபொருட்டு, ஆதிரைநாட்டு, குண்டுகட்டு என டுக்குறிப்பு முற்று வந்தது; ‘அது’ என்னும் பெயர்தந்து முடிக்க.
(பி - ம்.) 1நடைத்துஅது, எ - ம், பாலிற்றுமேலிற்று. | (9) | | | (328) | அஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும். | எ - ன், அஃறிணைப்பன்மைப் படர்க்கைமுற்றாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அகரஆகாரங்களை விகுதியாகவுடைய மொழிகள் அஃறிணைப்படர்க்கைப்பன்மை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம்; அவற்றுள், ஆகாரவீறு எதிர்மறுத்துரைக்குமிடத்தே வரும் எ - று.
வ - று. வந்தன, வாராநின்றன, வருவன; 1வாரா எ - ம், பொருள, மேல, நாள, கண்ண, கடிய, செயல எ - ம் வரும்; அவையென்னும்பெயர் தந்துமுடிக்க.
வவ்வீறு அகரவீறாயடங்குதலானும், கள்ளீறு தானேநின்று ஒருவினைக்கீறாய் 2வாராமையானும் ஈண்டுக்கொண்டிலரென்க. அஃதென்னை? உண்டார்கள், உண்மின்கள், உண்டேங்கள், “கற்றனங்கள் யாமுமுடன் கற்பனக ளெல்லாம்” (சீவக. 1795) எ - ம், உண்ணுங்கள், உறங்குங்கள், “கழல்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம், பொழில்கள் வெள்ளத் திடைப் புரளநூ றுங்களே” (சூளா. சீய. 167), 3 “பெயரீய்ந்தவண்கை பெரியபழுக்குங்களே” எ - ம் இருதிணைக்கண்ணும் கள்ளீறு ஈரிடத்தும் வருமாலோவெனின், உயர்திணைக்கண் முன்னின்ற அர் ஆர் முதலானவையே பால் விளக்கும்; அஃறிணைக்கட் செய்யுமென்னு நிகழ்காலவினைமுற்று ஒருமைபன்மைகட்குப் பொதுவாதலான், அதனாலேவிளங்காத ஒருமை பன்மை, “பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கு, மேல் வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே” என்பதனான் விளங்குமென்க.
(பி - ம்.) 1வாராஅவை 2வாராமலானும் 3(1) பெரீநதனவணகை; (2) பெரிதீததவணமைபெரிய | (5) | | | (329) | தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை. | எ - ன், பொதுவினையைத் தொகுத்துணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) தன்மைமுன்னிலைவினைமுற்றும் வினைக்குறிப்புமுற்றும், வியங்கோளும், வேறு இல்லை உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும், பெயரும்வினையுமெஞ்சும் இரண்டெச்சமும் ஆகிய எட்டும் இருதிணைக்கும் பொதுவான வினைகளாம் எ - று.
வியங்கோளென்பது ஏவல். | (11) | |
|
|