2. - வினையியல்

169

   
செய்கையம் எ - ம் வினை வினைக்குறிப்பு முற்றுவந்தன; யாமென்னும் பெயர்
வருவித்து முடிக்க.

     ஓம் விகுதியையும் வழக்குண்மையிற் கொண்டாரென்க.

     (பி - ம்.) 1உண்பம் 2ஆண்டையம், நாளினம்

(13)

 

(332)

செய்கெ னொருமையுஞ் செய்குமென் பன்மையும்
வினையொடு முடியினும் விளம்பிய முற்றே.

     எ - ன், எய்தியது இகந்துபடாமற் காத்தல் நுதலிற்று.

     (இ - ன்.) செய்கு, செய்குமென்னும் இவையிரண்டும் வினைகொண்டு முடியும்;
முடிந்தாலும் வினையெச்சமெனப்படா; தன்மை முற்றே ஆம் எ - று.

     வ - று. உண்குவந்தேன், உண்கும்வந்தேமெனவரும்.

     உம்மை எண்ணின்கண்ணதாகக்கொள்க.

      “முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினு, முற்றுச்சொ லென்னு முறைமையிற்
றிரியா” என்பது அகத்தியம்.

(14)

 

(333)

முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை.

     எ - ன், தன்மையோடுகூடிய முன்னிலைபடர்க்கைகள் தன்மையான் முடிந்தன;
முன்னிலையோடுகூடிய படர்க்கை எம்முடிபிற்றாமென்று ஐயுறுவார்க்கு ஐயமறுத்தல்
நுதலிற்று.

     (இ - ள்.) முன்னிலைகூடிய படர்க்கையையும் முன்னிலையால் முடிக்க எ - று.

     வ - று. அவனும் நீயும் போமின், அவரும் நீரும் வம்மின்எ - ம், “ஒண்டூவி
நாராய்நின் சேவலு நீயுமாய், வண்டூது 1பூங்கானல் வைகலுஞ் சேறிரால்”, “நின்ன
கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு, பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே,
ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே, இருவீர் வேற லியற்கையு மன்றே” (புறநா. 45)
எ - ம் ஈரிடத்தும் வரும்.

     (பி - ம்.) 1பூங்கானம்

(15)

 

(334)

ஐயா யிகர வீற்ற மூன்றும்
ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும்
முப்பா லொருமை முன்னிலை மொழியே.

     எ - ன், முன்னிலையொருமைவினையும் வினைக்குறிப்பும் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இம்மூன்று விகுதியீற்றனவானமுற்றும், ஏவலின்வரும்
இருபத்துமூன்றீற்றவான மொழிகளும் ஒருமைமுப்பாலையும் உணர்த்தும்
முன்னிலைவினை வினைக்குறிப்புமுற்றுக்களாம் எ - று.