176

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     தேடிய வான்பொருள், ஏறிய யானை, ஓடியபுரவி என இவ்வாறு 11பெயர் கொண்டு
முடியிற் பெயரெச்சமாவனவும் காண்க.

      “விருந்தின்றி யுண்டபகலும்” (திரி. 45), “துயிலின்றி 12யாளீந்த” (கலி. 30), 13
“நாளன்று போகிப் புள்ளிடை தட்பப், பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்”
(புறநா. 124) என வினையெச்சக்குறிப்பு வந்தவாறு காண்க. 14பிறவும்
இவ்வாறுவருவனவும் ஆராய்ந்துகொள்க.

     (பி - ம்.) 1நான்கும் செய்தென்னு மிறந்தகாலங்கொண்டும், வான் ...............மூன்றும்
எதிர்காலங்கொண்டும் முடியுமிடத்து வினைமுதல் வினையேற்றுமுடியும்; ஒழிந்தவைந்தும்
2எனச் செய்தென்னும் வாய்பாட்டுக்கு வந்து, எண்ணி, பருகி என இறந்தகாலம்
முறையே வந்தது. ‘புலராப் பசலையிடையெழூஉ’ 3காணாக்கழிந்தநாட்கிரங்கும்
4இவற்றுள் இடையெழுபு என்றது இடையிலெழுந்தென்றும், கல்லா என்றது கற்றென்றும்
காணா என்றது கண்டென்றும் காணூஉஎன்றது கண்டென்றும் செய்பு செய்யாச் செய்யூஉ
என்னும் வாய்பாடுகள் செய்தென்னும் இறந்தகாலத்திலடங்கினவாறுகாண்க. இனி,
தோன்றினானென்றும் துணிகசாத்தனென்றும் பருகி யுயிர்செருக்குமரவென்றும்
பசலையெழுந்ததென்றும் தெரிந்து குத்தின ஏறென்றும் கற்றுக்கழிப்பரென்றும்
இரங்குமென்னஞ்சமென்றும்நாணி நின்றவளென்றும் பெரிதுவந்தனளென்றும்
குஞ்சரமென்றும் வினைமுதலை இருதிணையுமேற்றன, கொள்வான் 5 (1)
கோடுநொடித்துண்ணும்; (2) கோடு கொடுத்துண்ணும் 6 செய்தெனநின்றுதன்றொழிலும்
7மெச்சமிருதொழிலு மெதிர்காலமுமேற்றன 8மிகையானே 9கருகிலையாகிவீழ்ந்துகரிந்து
10இவற்றில் மண்ணாதல் தொழிற்பெயர், கல்விகொண்டுதேடிய 11பொருள்கொண்டு
முடிவனவுங்காண்க 12யான்றுயர”, 13 “நாளின்று” 14 ‘நாளின்றி’ என்றது
நாளின்றென்றாயது வினையெச்சக்குறிப்பு; அன்றி இன்றி என்பன வல்லாது
வாராவெனவறிக.

 (25)

 

(344)

சினைவினை சினையொடு 1முதலொடுஞ் செறியும்.

     எ - ன், 2மேலதற்கு எய்தியதோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) சினைவினை என்னாமோவெனின், சினைதன்னுடனும் முடியும்
முதலுடனும் முடியும் எ - று.

     வ - று. கையிற்றுவீழ்ந்தது, கையிற்றுவீழ்ந்தான்; கையிறுபு வீழ்ந்தது,
கையிறுபுவீழ்ந்தான்; கையிறாவீழ்ந்தது, கையிறாவீழ்ந்தான்; கையிறூஉ வீழ்ந்தது,
கையிறூஉ வீழ்ந்தான் என3வரும். பிறவும் வந்த வழிக்காண்க.

     (பி - ம்.) 1முதலொடுசெறியும் 2முன்சொன்னவினைகளுக்கோர் புறநடை
3முதலினான்கும் வினைமுதல்கொண்டு முடிந்தன.

(26)