178 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | (பி - ம்.) 1வினையென்பதுணர்த்துதல்நுதலிற்று 2உயர்திணைப்படர்க் கையாண்பால் | (29) | | (348) | யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால். | எ - ன், மேல், இருதிணைக்கும் பொதுவான வினை வினைக்குறிப்பு உணர்த்தினார்; இதனால், உயர்திணைமுப்பாற்கும் பொதுவான வினைக்குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வினாப்பொருண்மையின்வரும் யாரென்னும் வினைக்குறிப்பு மொழி உயர்திணைமூன்றுபாற்கும் பொதுவாம் எ - று.
வ - று. யாரவன், யாரவள், யாரவரென வரும்.
யாரென்றது எத்தன்மையுடையாரென, வினைக்குறிப்பானது காண்க. | (30) | | (349) | எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால். | எ - ன், அஃறிணை1இருபாற்றாம் பொதுவான வினைக்குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) எவனென்னும் வினாப்பொருண்மை வினைக்குறிப்புச்சொல் அஃறிணை இருபாற்கும்பொதுவாம் எ - று.
வ - று. எவனது, எவனவை எனவரும்.
எவனென்றது எத்தன்மையுடையதென வினைக்குறிப்பானது காண்க.2
(பி - ம்.) 1இருபாற்குமுரியபொது 2இனி, எவன் அவனென உயர் திணைக்கண்ணுமாமென்க. | (31) | | (350 | வினைமுற் றே1வினை யெச்ச மாகலும் குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே. | எ - ன், முற்றுச்சொற்கட்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.
(இ - ள்.) முற்றுவினைச்சொல் வினையெச்சமாகி வருதலும் வினைக் குறிப்புமுற்றுச்சொல் வினையெச்சமாகியும் பெயரெச்சமாகியும் வருதலும் உளவாம் எ-று.
‘ஆகலும்’ என்றவும்மையான், அவ்வாறாதல் சிறுபான்மையெனக் கொள்க.
வ - று. “காணான் கழிதலு முண்டென் றொருநாள்”, “மோயின ளுயிர்த்த காலை” (அகநா. 5) “முகந்தனர் 2கொடுப்ப வுகந்தனர் பெயரும்” (புறநா. 33), “*விளிப்பது பயிலுங் குறும்பர்துந் துமியொடு” “எருவினுண்டாது குடைவன வாடி” (குறுந். 46) 3எ - ம், “பெயர்த்தனென் 4முயங்க யான்” (குறுந். 84), “மக்களுளிரட்டையாய் மாறினம் பிறந்தியாம்” 5எ - ம், “சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப”(‘எம்மூ ரல்ல தூர்நனி’ * “இளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு” (மலைபடு. 7) என்று பத்துப்பாட்டிலுள்ளது. | |
|
|