180 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | ‘காணாது, மோய், [வருந்தி] முகந்து, விளித்து, குடைந்து, பெயர்த்து, மாறி, சேர்ந்து, இயக்கி’ என முறையே செய்தென்னும் வினையெச்சமாகி மூவிடத்தைம்பாலுமேற்றன. இனி, விளிப்பதும் என்றவும்மை எண்ணும்மை; பயிரும் என்றது பயிலுந்தொழில் 7பொறாஅதமரிய 8எ - ம் விழுமிது கழியாதாயினும் 9நெஞ்சினன் றுயருழந்தனன்” 10மூவிடத்தும் வினைக் குறிப்புமுற்று வில்லனாகி, முகத்தளாகி கையினராகி, விழுமியதாகி, கையவாகி, நெஞ்சினேனாகி, கண்ணேமாகி, கண்ணினையாகி, வலத்திலுடையவராகி’ என ஆகியென்னும் வினையெச்சந்தருங்குறிப்பாய் மூவிடத்தைம்பாலு முறையேயாயின. 11எம்முள்ளான் எ - ம் 12 மூவிடத்தும் வெந்துப்பின்வந்த, அஞ்சாயல்பெற்ற, கடற்றானைபெற்ற, பெருவரைமிசைநின்ற, புன்றாளோமைநின்ற, வேட்கைபெற்ற, காதல்பெற்ற, தோள்பெற்ற வினைவேட்கைபெற்ற’ எனச் செய்தவென்னும் பெயரெச்சக்குறிப்பாயின. இவை இவ்வாறு பெயர்தொடர்ந்தனவெனக்கொள்க. 13என்ற தொல்காப்பியனார் கருத்தாகவுரைத்தலமையாதோவெனின் 14பிறிதுதொழில் 15சிந்தினராயர் 16பெயர்ந்தவாயர் | (32) | இரண்டாவது வினையியல் முற்றிற்று. | மூன்றாவது | பொதுவியல். | | (351) | இருதிணை யாண்பெணு ளொன்றனை யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி னானே. | என்பதுசூத்திரம்.
இவ்வோத்து 1என்னுதலியதோவெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், பெயர் வினை இடை யுரி யென்னும் நான்கு சொல்லின் இயல்பும் உணர்த்திற்றாதலாற் பொதுவிய லென்னும் பெயர்த்து; மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோவெனின், கீழ்ப்போன பெயரையும் வினையையும் மேல்வரும் இடையையும் உரியையும் நோக்கிநிற்றலிற் சிங்க நோக்கெனக்கொள்க.
இவ்வோத்தினுள், இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பெயர்க்கும் வினைக்கும் உரியதோரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இருதிணையிடத்தும் ஆண்மைப்பொருளினும் பெண்மைப் பொருளினும் ஒன்றனையொழிக்கும், அவ்விருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் குறிப்பினான் எ - று. | |
|
|