3. - பொதுவியல்

181

   
     வ - று. வடுகரசர் 2ஆயிரவர் மக்களையுடையார், “மம்மர்கொண் மாந்தர்க்
கணங்காகுந் தன்கைக்கோல், அம்மனைக்கோ லாகிய ஞான்று” (நாலடி. 14) எ - ம்,
பெருந்தேவி 3பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்களுளர், இது, பத்து மானிடத்தின்
முலைப்பால் எ - ம் உயர்திணைப்பெண்ணொழிபெயரும் ஆணொழிபெயரும் வந்தவாறு.
அரசர் ஆயிரவர்மக்களொடு தாவடிபோயினார், இன்று இச்சேரியாரும் அச்சேரியாரும்
பொருப எ - ம், இன்று இவ்வூராரெல்லாம் தைந்நீராடுப, குறுங்கானம்போப எ - ம்
உயர் திணைப்பெண்ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தவாறு. நம்மரசன்
ஆயிரம்யானையுடையன் எ - ம், நம்பி நூறு எருமையுடையன் எ - ம் அஃறிணைப்
பெண்ணொழிபெயரும் ஆணொழிபெயரும் வந்தவாறு. இன்று இவ்வூர்ப்பெற்றமெல்லாம்
உழவொழிந்தன எ - ம், இன்று இவ்வூர்ப்பெற்றமெல்லாம் அறத்திற்கேகறக்கும் எ - ம்
அஃறிணைப் பெண்ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தவாறு.

     (பி - ம்.) 1என்னுதலியெடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின் 2ஆயிர
மக்களையுடையர் இவண்மாட்டுங்காழிலா மம்மர் 3புறையுயிர்த்த

(1)

 

(352)

பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல்
ஆவோ 1வாகலுஞ் செய்யுளு ளுரித்தே.

     எ - ன், செய்யுட்காவதோர் 2முறைமையுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பெயர்வினைகளின் ஈற்றில் நின்ற னளரயக்களின் அயலிலுள்ள
ஆகாரம் ஓகாரமாகவும்பெறும், செய்யுளுள் எ - று.

     உம்மையால், ஆகாமலும் உரித்தென்றவாறு.

     வ - று. “வில்லோன் காலன கழலே தொடியோள், மெல்லடி மேலவுஞ் சிலம்பே
நல்லோர், யார்கொ லளியர் தாமே” (குறுந். 7), “பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது
கொடுத்தோய்” (புறநா.2)
     எ - ம்; “படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்” (புறநா. 194), “3நல்லை
மன்னென நகூப்பெயர்ந்தோளே” (அகநா. 248), “சென்றோ ரன்பிலர் தோழி”
(அகநா. 331), “வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப” (அகநா. 80) எ - ம்
பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் வந்தவாறு.

     (பி - ம்.) 1வாதலும் 2இலக்கணம் உணர்த்துதல், நுதலிற்று.3 (1)
நல்லண்மன்றங்கூய்ப்பெயர்ந்தோளே; (2) நல்லோண்மன்ற

(2)

 

(353)

உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினும்
திரியா தத்த 1மீற் றுருபி னென்ப.

     எ - ன், வேற்றுமையுருபுகட்கும் வினைச்சொற்கட்கும் ஆவதோர்
விதியுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எண்வகைவேற்றுமையுருபுகளும் மூவகை வினைச்சொற்களும்
எதிர்மறுத்துச் சொல்லுமிடத்தும் தத்தம் ஈற்றுருபுகளின் வேறுபடா எ - று.