| 20 | பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே. |
என்பது சிறப்புப்பாயிரம். இதற்குப் பொருள் மேலே சொல்லுதும். (பிரதிபேதம்) 1பரிதி. 2முழுதும் |
பாயிரம் |
பாயிரத்தின் பெயர்கள் |
| (1) | முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம். |
(இதன்பொருள்.) இவை 1பாயிரத்திற்குக் காரணப் பெயர்களாம் என்றவாறு. (பி-ம்.) 1பாயிரத்திற்குக் காரணப்பெயராம் |
(1) |
பாயிரத்தின் வகை |
| (2) | பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே. |
(இ-ள்.) மேற்சொன்னபாயிரம் பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிர முமென இருவகைப்படும் எ-று. அவற்றுள், பொதுப்பாயிரமாவது எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுவதெனவும், சிறப்புப்பாயிரமாவது ஒரு நூன்முகத்து உரைக்கப்படுவதெனவும் கொள்க. |
(2) |
பொதுப்பாயிரம் |
| (3) | நூலே நுவல்வோ னுவலுந் திறனே கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும் எல்லா நூற்கு 1மியைபொதுப் பாயிரம். |
(இ-ள்.) இவ்வைந்தும் எல்லாநூன்முகத்தும் பொருந்தும் பொதுப் பாயிரமாம் எ-று. (பி - ம்.) 1மிவை |
(3) |
நூலின் இயல்பு |
| (4) | நூலி னியல்பே நுவலி னோரிரு பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் |