208 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | காலமென்று வேற்றுணர்வும் பிறவும் படுவதில்லையென்ப. இனி, காலம் ஒன்றென்பார், யாறொழுகும், மலைநிற்குமென உள்பொருள் ஒரு காலத் தானே சொல்லப்படும், பிறிதில்லையென்ப. இறப்பும் எதிர்வுமென இரண்டென்பார், கோலோடுங் காற் சென்றதூஉம் செல்வதூஉமன்றே? அதனால், நிகழ்வில்லையென்ப. மூன்றென்பார், நெருநல், இன்று, நாளை எ - ம், வந்தான், வாராநின்றான், வருவான் எ - ம் இவ்வாறு சொற்கள் மூன்று காலமும் காட்டுதலின் மூன்றென்ப. இவ்விகற்பமெல்லாம் அறிவித்தற்கு இவ்வாறு சூத்திரஞ்செய்தாரெனக்கொள்க.
ஏகாரத்தான் மூன்றென்பதே ஈண்டுப் பொருளெனக்கொள்க.
“உலக வழக்கமு மொருமுக் காலமு, நிலைபெற வுணர்தரு முது 2மறை நெறியான்” என்றார், அகத்தியனார்.
(பி - ம்.) 1 (1) எதிர்நிகழ்பென, (2) எதிர்புநிகழ்பென 2 முறை | (31) | | (382) | முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே. | எ - ன், காலவழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) முக்காலத்தினும் ஒருதன்மையவாய் நிகழும்பொருள்களை நிகழ்காலச்சொல்லானே சொல்லுவர், தொல்லாசிரியர் எ - று.
வ - று. யாறொழுகும், மலைநிற்கும், நிலம் கிடக்கும், 1நீர்குளிரும், 2தீச்சுடும், வளியுளரும் எனவரும். பண்டும், இன்றும், மேலுமென முக்காலப் பொதுவாக்குக. பிறவுமன்ன.
(பி - ம்.) 1 நீர்தண்ணிது 2 தீய்வெய்து | (32) | | (383) | விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும் பிறழவும் பெறூஉ முக்காலமு மேற்புழி. | இதுவுமது.
(இ - ள்.) இந்நான்கு பொருண்மைக்கண்ணும் முக்காலமும் தம்முள் மயங்கிவரவும்பெறும், ஏற்குமிடத்து எ - று.
உம்மையான், மயக்கம் ஒருதலையன்றென்க.
வ - று. விரைவு : சோறுவேவாநிற்க அதை உண்டு போதற் பொருட்டாக இருந்தானொருவனைப் புறத்துநின்றானொருவன் தாம் இருவரும் போக வேண்டுங்குறையுடைமையால், இன்னும் உண்டிலையோ? போதுகவென்றால், உண்டேனுண்டேன், போந்தேன், போந்தேனென்னும்; உண்ணாநின்றானைச்சொல்லினும், உண்டேனுண்டேன், போந்தேன் போந்தேனென்னும். இவை விரவு.
மிகுதி : அறஞ்செய்தான் சுவர்க்கம்புக்கான், சுவர்க்கம்புகும்; தாயைக்கொன்றான் நிரயம்புக்கான், நிரயம்புகுமென்னுமிவை உலகின் மிக்கவாதலின், (இப்பயன்கள் தப்பாமையின்) மிகுதிக்கண்வந்தன. | |
|
|