210 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. | எ - ன், செப்பு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்வெட்டினுள்ளும் முதன்மூன்றும் செவ்வன் இறையாம்; ஏவல்முதலைந்தும் செப்பின் பொருண்மையாய் வருதலின் அவற்றையும் செப்பெனக்கொள்வர் புலவர் எ - று.
வ - று. அறிவானொருவனை ஒருவன் ‘இச்சொற்குப் பொருள் யாது? மதுரைக்கு வழி யாது?’ என்றவழி, இஃதென்பது சுட்டு. சாத்தா உண்ணாயோ? என்றால், உண்ணேனென்பது மறை; உண்பேனென்பது நேர்தல்; நீ உண் என்பது ஏவல்; உண்ணேனோ? என்பது வினாவெதிர் வினாதல்; வயிறுகுத்திற்றென்பது உற்றது உரைத்தல்; வயிறுகுத்து மென்பது உறுவதுகூறல். ‘மணியுளவோ? பயறுளவோ?’ என்றால், வயிரமுள உழுந்துளவென்பது இனஞ்செப்பல்.
இனி, ‘நிலவிய’ என்றமிகையானே, வினாவின்றியும் செப்பு வருவனவுமுள வென்க; அறிவானொருவன், இன்னநாட் காற்றடிக்கும்; இன்னநாள் மழைபெய்யும்; இன்னநாள் வாழ்வுவருமென்பனவும், ஆறுசெல்வானொருவன், ‘கங்கையாடிப்போந்தேன், ஒருபிடி சோறு தம்மின்; ஓராடை தம்மின்’ என்பனவுமாம் பிறவுமன்ன. இவற்றின்வழு மேலேகாட்டினாம். | (35) | | (386) | வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல். | எ - ன், இவ்விரண்டும் வழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வினாவிடத்தும் எதிர்மொழி செப்புமிடத்தும் சினையும் முதலும் தம்முள் மயங்கப்பெறா எ - று.
வ - று. சாத்தனல்லனோ? கொற்றனல்லனோ? என வினாயவிடத்துச் சாத்தனிற் கொற்றனல்லன்; கொற்றனிற் சாத்தனல்லனென்க. சாத்தன் மயிர் நல்லவோ? கொற்றன் மயிர் நல்லவோ? என வினாயவழி, சாத்தன் மயிரிற் கொற்றன்மயிர் நல்ல; கொற்றன் மயிரிற் சாத்தன்மயிர் நல்லவென்க. பிறவுமன்ன. | (36) | | (387) | எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதன் மரபே. | எ - ன், மரபாவது இன்னதென்று அதனிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) யாதொருபொருளை யாதொருசொல்லான் யாதொரு படியானே முன்னாட் கற்றுவல்லோர்கள் சொன்னார்கள்? அதனை அப்படியே சொல்லுதல் மரபாவது எ - று.
அஃதாவது பொருளாதி யாறனுள்ளும் ஒன்றைப் பலசொல்லானும், பலவற்றை ஒருசொல்லானும் வழங்குதலாம்; அவற்றுட்சிலவருமாறு: | |
|
|