22

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (பி - ம்.) 1 கொண்டார்இச்சூத்திரம் 2 சொன்னவாறோ 3 செய்யு ளிடத்தன்றியும்
வழக்கிடத்தும் யாண்டும் 4 குற்றுகரம், குற்றிகரம்

(7)

2. எழுத்தின்பெயர்

     

(62)

அம்முத லீரா றாவி கம்முதல்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்.

     எ - ன், ஒருசார் பொதுப்பெயராமாறுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) அகரமுதலாகநின்ற பன்னிரண்டினையும் உயிரென்றும்,
ககரமுதலாகநின்ற பதினெட்டினையும் உடம்பென்றும் பெயரிட்டுவழங்கி னார்கள், 1
முற்காலத்துக் கற்றுவல்லோர் எ - று.

     ‘விளம்பினர் புலவர்’ என்ற விதப்பினோனேயும், பாயிரத்திற் பெறுவதேயன்றி
நூலுள்ளும் இஃது *எதிர்நூலல்லவென்பது பெற்றாமெனக் கொள்க.

     (பி - ம்.) 1 மேற்காலத்து

குறில்

     

(63)

அவற்றுள்,
அஇ உஎ ஒக்குறி லைந்தே.
     இதுவுமது.

     (இ - ள்.) ஆவியென்றும் மெய்யென்றும் மேற்கூறப்பட்டனவற்றுள், அ இ உ எ
1 என்னுமைந்தும் குற்றெழுத்தென்னும் குறியவாம் எ - று.

     அஇஉஎஒ என இவற்றை உச்சரித்து அன்னவாதல் கண்டுகொள்க. ‘அவற்றுள்’ 2
என்பதனைப் பெயரதிகாரமுற்றுமளவும் வருவித்துக்கொள்க.

     (பி - ம்.) 1 என்று சொல்லப்படும் ஐந்தெழுத்தும் 2 என்பதனை
இவ்வதிகாரமுற்றும்

(9)

நெடில்

     

(64)

ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்.
     இதுவுமது.

     (இ - ள்.) இச்சொல்லப்பட்ட ஏழும் நெட்டெழுத்தென்னும் பெயரவாம் எ - று.

     ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என உச்சரித்து அன்னவாதல் கண்டு கொள்க.

(10)


     * “எதிர்நூலென்பதும் ஒன்றுண்டு. அது யாதோவெனின், முதனூலின்
முடிந்தபொருளை ஓராசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழவைத்தால் அதனைக்
கருவியால் திரிவுகாட்டி ஒருவாமைவைத்தற்கு ஒள்ளியான் ஒரு புலவனால்
உரைக்கப்படுவது; என்னை? ‘தன்கோ ணிறீஇப் பிறன் கோண் மறுப்ப, தெதிர்நூ லென்ப
ரொருசா ரோரே’ (இறை. க, சூ - உரை; யாப்பருங்கலவிருத்தி.)