இதுவுமது.
(இ - ள்.) ஒருவன் ஒன்றை வினாவினால் அது தம்பக்கலில்லையென்று உரைக்கவேண்டின், அவன் வினாயதற்கு இனமாய்த் தன் பக்கலுள்ள தனைச்சொல்லி வினாயதனை இல்லையென்றும், உளதாயின் அதனை இத்துணையுண்டென்று சுட்டியும் சொல்லுவர் தொல்லோர், உரை 2பல்காமற்கு எ - று.
வ - று. பயறுளவோ வணிகீரேயென்றாற்கு உழுந்தல்லதில்லை; இத்துணைப்பயறுளவென்க. நூறுவிற்கும் பட்டாடையுளவோ என்றாற்கு ஐம்பதுவிற்கும் கோசிகமல்லதில்லை; இத்துணைப்பட்டாடையுளவென்க. பிறவுமன்ன.
(பி - ம்.) 1இனனாவுள்ளது 2பல்காமைக்கு |
(55) |
| | (406) | ஈதா கொடுவெனு மூன்று முறையே இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை. |
இதுவுமது.
(இ - ள்.) ஈயென்னுஞ்சொல் ஈவானின் இழிந்த இரப்போன் சொல்லுவதாம்; தாவென்னுஞ்சொல் ஈவானொடு ஒக்கும் இரப்போன் சொல்லுவதாம்; கொடுவென்னுஞ்சொல் ஈவானின் மிக்க இரப்போன் சொல்லுவதாம் எ - று |
(56) |
| | (407) | முன்னத்தி னுணருங் கிளவியு முளவே. |
இதுவுமது.
(இ - ள்.) சொற்கிடந்தவாறன்றிச் சொல்லுவான் குறிப்பினானே வேறுபொருள்பட வருஞ்சொற்களும் சிலவுளவாம் எ - று.
வ - று. “செஞ்செவியர் வெள்ளொக்கலர்” என்றவழி, செவ்வென்று உதிரஞ்சொரியுஞ்செவியர், வெள்ளிய சுற்றத்தாரென்பதன்று; செவியெல்லாம் சாலச் செம்பொனணிந்தார், முட்டில் செல்வத்துக் கிளையினையுடையா ரென்றவாறு; ‘வெள்ளொக்கலர்’ என்பது மாசற்ற சுற்றத்தினையுடையரென்றுமாம். “குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையவர்” என்றவழி, கோழியெறிவா ரென்றுணரற்பாலதன்று; ஒன்றானும் முட்டில் செல்வத்தாரென்றவாறு. பிறவுமன்ன. |
(57) |
| | (408) | கேட்குந போலவுங் கிளக்குந போலவும் இயக்குந போலவு மியற்றுந போலவும் அஃறிணை மருங்கினு மறையப் படுமே. |
இதுவுமது.
(இ - ள்.) இத்தொழில்களில்லனவும் உள்ளனபோல அஃறிணையிடத்தும் சொல்லப்பெறும் எ - று.
வ - று. “நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு, மென்னீரள் யாம்வீழ் பவள்” (குறள். 1111), “கரவலமென் றோரைக் கண்ட திலையோ. இரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்காள்” |