| 224 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (410) | யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை 1விற்பூண் தாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டறிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே. | எ - ன், பொருள்கோட்பகுதி யுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) யாற்றுநீர்ப்பொருள்கோள் முதலாக எட்டாம் பொருள் கொள்ளுமுறைமை எ - று.
இவற்றை, “நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற், றவைநான் கென்ப மொழிபுணரியல்பே” (தொல். எச்ச. 8) என நான்காகவும், * “பூட்டுவில் விதலை யாப்புக் கொண்டுகூட், டொருசிறை நிலையே பாசி 2நீக்கமென், றாக்கிய வைந்தும் பொருள்கோளாகும்” என ஐந்தாகவும், இவ்வெட்டுடனே அடிமொழிமாற்றென்ப தொன்றுகூட்டி(ஒன்பதாகவும் உரைப்பாருமுளர். அவையும் இவற்றுள்ளே அடங்குமெனக்கொள்க.இம்முறைவைத்த காரணமும் காண்க.
(பி - ம்.) 1விற்பூட்டு 2நீக்குமென் றாக்கிய வைந்துமப் | (60) | | | (411) | மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள் அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே. | எ - ன், யாற்றுநீர்ப்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஏனைஅடிகளைநோக்காது அடிதோறும் பொருள் அற்றுவருவது யாற்றுநீர்ப் பொருள்கோளாம் எ - று.
வ - று. “அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம், விலைப்பாலிற் கொண்டூன் மிசைவதூஉங் குற்றம், சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம், கொலைப்பாலுங் குற்றமே யாம்” (நான்மணி. 26) என வரும். | (61) | | | (412) | ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாற்றே. | எ - ன், மொழிமாற்றுப் பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) கருதியபொருளுக்குப் பொருந்தியமொழிகளை ஓரடியுள்ளே மாற்றிச்சொல்லுவது மொழிமாற்றாம் எ - று.
வ - று. “சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய, யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப, கானக நாடன் சுனை” எனவருமிதனுள், சுரைமிதப்ப, அம்மி ஆழ எனவும், யானைக்குநிலை முயற்குநீத்தெனவும் ஓரடியுள்ளே மாற்றினவாறுகாண்க; இதனைச் சுண்ணமொழி மாற்றென்று ஈரடியிடத்தேகொள்ளின், * இந்த ஐந்து பொருள்கோளையும் இவற்றின் உதாரணங்களையும் இறையனாரகப்பொருள், 59 - ஆம் சூத்திரவுரையிற் காண்க. ( பொருள்கோள் ஒன்பதென்பவர் நேமிநாதமுடையார்; எச். சூ. க; யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றிலும் பரக்கக்காணலாம். | |
|
|