| சுட்டெழுத்துக்கள் | | | (65) | அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே. | எ - ன், அவ்வுயிர்க்கே இன்னும் ஒருவகையாற் பெயரிடுதல் நுதலிற்று. (இ - ள்.) அ இ உ என்னும் இம்மூன்றும் மொழிமுதற்கண்ணே தனித்துநிற்பிற் சுட்டென்னும் குறியவாம் எ -று. 1 வரலாறு: அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றனெனக் கண்டு கொள்க. (பி - ம்.) 1 உதாரணம் (பின்னும் இப்படியே.) | வினாவெழுத்துக்கள் | | | (66) | எயா முதலும் ஆஓ வீற்றும் ஏயிரு வழியும் வினாவா கும்மே. | 1 இதுவுமது.
(இ - ள்.) எகரமும் யாவும் மொழிமுதற்கண்ணே நின்று 2 வினாவாம்; ஆகாரமும் ஓகாரமும் ஈற்றின்கண்ணேநின்று 3 வினாவாம்; ஏகாரம் இவ்விரண்டிடத்தும்நின்று 4 வினாவாம். எ - று.
உயிர்வினாவுடனே யாவினாவுரைத்தமை மயங்கக்கூறலென்னுங் குற்றமாம் பிறவெனின், இது தொகைவகைவிரிபடச் செய்கின்ற நூலாதலானும் முதல்வினாவென்னும் பொருளொப்புமையானும் குற்றமாகாதெனக்கொள்க.
வ - று. எவன், எவள், எவர், எது, எவை; யாவன், யாவள், யாவர், யாது, யாவை என எ யா முதற்கண் வினாவாய் வந்தன. *உண்கா, (உண்கோ? கொற்றா! (சாத்தா, தேவா, பூதா) என ஆகாரமும் ஓகாரமும் ஈற்றின்கண் வினாவாய்வந்தன. ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை; (உண்கே? கொற்றா! என ஏகாரம் முதலினும் ஈற்றினும் நின்று வினாவாயிற்று.(
(பி - ம்.) 1 எ - ன், இதுவுமது 2 முதல்வினாவென்னும் பெயரவாம் 3 ஈற்றுவினாவென்னும் பெயரவாம் 4 இருவழிவினாவென்னும் பெயர்த்தாம் | (12) | வல்லினம் | | | (67) | வல்லினங் கசட தபறவென வாறே. | எ - ன், மேல் மெய்யென்று குறிப்பிடப்பட்டவற்றுள், ஒரு சாரனவற்றிற்கு இன்னும் ஒருவகையாற் பெயரிடுதல்நுதலிற்று.
(இ - ள்.) கசடதபற வென்னும் ஆறெழுத்தும் வல்லினமென்னும் குறியவாம் எ-று. |
* உண்பேனா? ( உண்பேனோ? ( உண்பேனா? ( இதன்பின், “ஐ ஒள இ உச்செறிய” என்னும் சூத்திரம் சில பிரதிகளில் வரையப் பெற்றுள்ளது. | |
|
|