232

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     (பி - ம்.) 1ஞெரோவென்பது 2ஞெரோவென 3நப்பின்னை, நந்நாகர், நக்குடகம்
4கொள்ளெனச்செய்யும்

(2)

 

(421)

பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனவா றேகா ரம்மே.

     எ - ன், வேற்றுமையுருபுமுதலாயின நான்கும் மேலே சொல்லப் பட்டன;
தத்தம்பொருளனவும் இசைநிறைப்பனவும் அசைநிலையும் குறிப்புமாவனவுணர்த்துவான்
றொடங்கினார் அவற்றுள், இஃது ஏகார விடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) ஒருகுழுவின் ஒன்றைப்பிரித்தற்கண்ணும் வினாதற்கண்ணும் பலவற்றை
அடுக்கி எண்ணற்கண்ணும் ஈற்றிலே பொருள் வேண்டா விடத்தும் ஒருபொருளைத்
துணியுமிடத்தும் ஓசைநிறைக்க வேண்டுமிடத்தும் நிற்றலின், அவ்வப்பெயரான் ஆறு
கூற்றதாம் ஏகாரம் எ - று.

     வ - று. அவனேகொண்டானென்பது பிரிநிலை; நீயேகொண்டா யென்பது வினா;
நிலனே நீரே தீயே வளியே என்பது எண்; “கடல் போற் றோன்றல காடிறந் தோரே”
(அகநா. 1) என்பது ஈற்றசை; அவனே கொண்டான், “உண்டேமறுமை” என்பன
தேற்றம்; “1ஏயே யிவ ளொருத்தி பேடியோ வென்றார்” (சீவக. 652) என்பது இசைநிறை.

     (பி - ம்.) 1 ஏஏ

(3)

 

(422)

ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவசை நிலைபிரிப் பெனவேட் டோவே.

     எ - ன், ஓகார இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒரு சொல்லொழியவரும் ஒழியிசையும் வினாவும் ஒன்றைச்
சிறப்பிப்பதும் அறிந்தபொருளை எதிர்மறுப்பதும் 1தெரிநிலையும் ஒரு பொருட்கழிவும்
அசைநிலையும் பிரிநிலையுமென்னும் எட்டுப்பொருட்கூற்றதாம் ஓகாரம் எ - று.

     வ - று. கொளலோ கொண்டானென்பது ஒழியிசை; கோடற்குத் தகுமாயினும்
கொண்டுய்யப் போயினானல்லலென ஒரு சொல் ஒழிவுபட வந்தமையின். அவனோ
அல்லனோவென்பது வினா. “ஓஒ பெரியன்” என்பது சிறப்பு.
யானோகொண்டேனென்பது எதிர்மறை. நன்றோ அன்று, தீதோஅன்றென்பது
தெரிநிலை; இடை நிகர்த்ததென்பது தெரித்தமையின். “நைதலொன்றி நல்லறஞ்
2செய்கின்றிலா, ரோஒ தமக்கோ ருறுதி யுணராரோ” என்பது கழிவு. “சார னாட
நடுநாள், வாரல் வாழியோ வருந்துதும் யாமே” (குறுந். 69), “காணிய வம்மினோ
3கங்குலது நிலையே” என்பன அசைநிலை; “முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்,
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப், பொழுதோ 4தான்வந் தன்றே” (குறுந். 155)
என்பது பிரிநிலை.