236 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (431) | மன்னே யசைநிலை யொழியிசை யாக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும். | எ - ன், மன்னென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இவ்வாறு பொருட்கண்ணும் வரும், மன்னென்னு மிடைச்சொல் எ - று.
வ - று. “மாலை யென்மனார் மயங்கி யோரே” (குறுந். 234; கலி. 119.) இஃது அசைநிலைக்கண் வந்தது. “பண்டு கூரியதோர் வாண்மன்.” இப்போது கோடிற்றென்றானும், வாய் போயிற்றென்றானும், 1இளநீர்த்ததாயிற் றென்றானும் ஒருசொல்லொழியவந்தமையின், இஃது ஒழியிசை. “பண்டு காடுமன்” என்பது இப்பொழுது கயல்பிறழும் வயலாயிற்றென ஆக்கப் பொருட்கண் வந்தது. “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே” (புறநா. 235) எ - து அஃது இப்பொழுது கழிந்ததெனக் கழிவின்கண்வந்தது. “மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி” (சிலப். 7 : 3.) இது மிகுதிக்கண்வந்தது. “மன்னா வுலகத்து மன்னியது புரைமே” (கலி. 54), “பூமன்னும் பொழில்” எ - து நிலைபேற்றின்கண்வந்தது.
(பி - ம்.) 1 (1) இந்நீர்த்தாய்த்தென்றானும்;(2) இன்னீர்த்தாயிற்றென்றானும் | (13) | | (432) | வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே. | எ - ன், மற்றென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இம்மூன்று பொருட்கண்ணும் வரும் மற்றென்னு மிடைச் சொல் எ - று.
வ - று. “மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது” (நாலடி. 19.) இது வினைமாற்று. “மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்” (சீவக. 1873.) இஃது அசைநிலை. “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந் துறும்” (குறள். 380.) இது பிறிதென்பதன் மேல் வந்தது. | (14) | | (433) | மற்றைய தென்பது சுட்டிய தற்கினம். | எ - ன், மற்றையதென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மற்றையதென்னு மிடைச்சொல் சுட்டியதனையொழிய, அதற்கு இனமான பிறிதொன்றினைக் காட்டும் எ - று.
வ - று. பலபொத்தகங் 1கிடந்துழி, ஒருவன் ஏவுவான் ஏவலாளனை, ‘பொத்தகங்கொடுவா’ என்றால், அவன் ஒரு பொத்தகங்கொடு வந்தவிடத்துத் தான்கருதியது அன்றெனின், அவன், ‘மற்றையது கொணா’ என்னும்; என்றால், கொணர்ந்ததன் இனமாயதனை அச்சொற் சுட்டிற்றாகலான், கொணர்ந்ததனையொழித்து அதற்கினமான பொத்தகம் கொணருமென்பது.
(பி - ம்.) 1 கிடப்புழி | (15) | |
|
|