| (434) | கொல்லே யைய மசைநிலைக் கூற்றே. |
எ - ன், கொல்லென்னுமிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) கொல்லென்னுமிடைச்சொல் ஒருபொருட்கண் ஐயப்பாடும் அசைநிலையுமான கூறுபாட்டதாம் எ - று.
வ - று. குற்றிகொல்லோ? மகன் கொல்லோ என்பது ஐயம். “ 1பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர், வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் 2கேஎளினி” (கலி. 11) என்பது அசைநிலை.
(பி - ம்.) 1 பிரிவெள்ளி 2 கேளினி |
(16) |
| (435) | ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே. |
எ - ன், இவ்விரண்டிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுத லிற்று.
(இ - ள்.) இவ்விரண்டிடைச்சொல்லும் இசைநிறைத்தற்கண் வரும் எ - று.
வ - று. “முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர், விதைக்குறு வட்டி போதொடு பொதுள” (குறுந். 155) எ - ம், “சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்த்தே” எ - ம் வரும். |
(17) |
| (436) | அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே. |
எ - ன், இவ்விரண்டிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுத லிற்று.
(இ - ள்.) இவ்விரண்டிடைச்சொல்லும் அசைநிலையாயும் இடப் பொருளவாயும் வரும் எ - று.
வ - று. “அந்திற் கச்சினன் கழலினன்” (அகநா. 76) எ - து அசைநிலை; “வருமோ சேயிழை யந்திற் கொழுநற் காணிய” (குறுந். 293) எ - து அவ்விடத்தென இடப்பொருட்டாய் வந்தவாறு. “ஆங்கத், திறனல்ல யாங்கழற யாரை நகுமிம், மகனல்லான் பெற்ற மகன்” (கலி. 86) எ - து அசைநிலை; “ஆங்காங் காயினு மாகக் காண்டக” (முருகு. 250, பி. ம்.) என்பது இடம். |
(18) |
| (437) | அம்ம வுரையசை கேண்மினென் றாகும். |
எ - ன், அம்மவென்னுமிடைச்சொல்லின் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அம்மவென்னுமிடைச்சொல், உரையசையாயும் கேண்மி னென்னுமுன்னிலை ஏவற்பொருட்கண்ணதாயும் வரும் எ - று.
வ - று. “செயனின்ற பண்ணினுட் செவிச்சுவைக் கொள்ளாமை, நயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும், பயனின்று மன்றம்ம காமம்” (கலி. 142) என்பது உரையசை. “அம்ம வாழி தோழி” (நற். 158; குறுந். 104; ஐங்குறு. 31 - 40) என்பது கேளாயென்னும் பொருட்கண் வந்தது. |
(19) |